மேலும் 4 பாஜக எம்.எல்.ஏக்கள் சமாஜ்வாதி கட்சிக்கு தாவினர்! உ.பி.யில் சலசலக்கும் ஆட்சியாளர்கள்!

ம.பா.கெஜராஜ்,
அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 7-ந் தேதிவரை, உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அங்கு ஆட்சியாளர்களாக உள்ள பா.ஜ.க.வில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஆயுஷ்துறை மந்திரி தரம் சிங் சைனி ராஜினாமா செய்ததுடன், பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இதனையடுத்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்தார். அவரை சமாஜ்வாதி கட்சிக்கு வரவேற்கிறேன் என அகிலேஷ் யாதவ் டுவீட் செய்திருந்தார். இது ஆட்சியாளரை திகைக்க வைத்தது.
இந்த அதிர்ச்சியிலிருந்து பா.ஜ.க.சுதாரிப்பதற்கு முன் யோகி ஆதித்யநாத் மந்திரிசபையில் இருந்த பாஜக முன்னாள் தலைவரும், தொழிலாளர் நலத்துறை மந்திரியான சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தரம் சிங் சைனி, பகவதி சாகர் மற்றும் வினய் ஷக்யா ஆகியோருடன் இன்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் அக்கட்சியில் ஐக்கியமானார்கள்.
அம்மாநிலத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கட்சி தாவல் தொடங்கி இருப்பது அரசியல் அரங்கில் பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.வின் மவுசை இது குறைக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.