பிறந்த நாள் கொண்டாட வழிப்பறி..... சிக்கியவர்களுக்கு மாவுகட்டு!

ஜே.தேவபிரகாஷ்,
பிறந்த நாளுக்காக வழிப்பறி செய்து சிக்கி மாவு கட்டு போடப்பட்ட நிலையில், இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி வண்டறந்தாங்கல் பகுதியை சேர்ந்த ரவுடி கவுதம் என்ற குட்டி ஜானி, இவன் கடந்த 12/1/2022 அன்று தனது பிறந்த நாளை கொண்டாட நண்பர்களான விருதம்பட்டு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ரவுடி விஷ்வா, காட்பாடி பாரதியார் நகரை சேர்ந்த விக்னேஷ் வண்டறந்தாங்கல் மணிகண்டன் சொரக்கல்பேட்டை பகுதியை சேர்ந்த சசிகுமார் ஆகியோருடன் சென்று டீக்கடை உரிமையாளர் ஒருவரை மிரட்டி 4000 ரூபாய் பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில், டிஎஸ்பி பழனி தலைமையிலான தனிப்படையினர் குட்டி ஜானி உள்ளிட்ட 5 பேரையும் நேற்று கைது செய்தனர்.
குட்டி ஜானியும், விஷ்வாவும் கடந்த ஆண்டு வேப்பங்குப்பம் காவல் நிலைய எல்லையில் திருமால் என்ற கூலி தொழிலாளி கடத்தல் வழக்கில் கைதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குட்டி ஜானி மற்றும் விஷ்வாவுக்கும் மாவுகட்டு போடப்பட்டது. வழுக்கி விழுந்ததில் காயம் ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்ட நிலையில் அவர்கள்வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.