கூகுல்பே கன்பியுஷன்! பணத்தை ஒப்படைத்த ஓட்டல்காரர்!

கூகுல்பே கன்பியுஷன்! பணத்தை ஒப்படைத்த ஓட்டல்காரர்!

கு.அசோக்,

 உணவக உரிமையாளருக்கு தவறுதலாக கூகுல்பேயில் அனுப்பப்பட்ட 75 ஆயிரம் ரூபாய்-காவல் நிலையத்தில் உரியவரிடம் ஒப்படைப்பு.

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே நபீல்  என்பவர் ஃபாஸ்ட் ஃபுட் உணவகம் நடத்திவருகிறார்.இவரது கடைக்கு நேற்று இரவு நெல்லூர்பேட்டை பகுதியை சேர்ந்த சஞ்சய் ,சிங்கராசு, ஆகிய சகோதரர்கள் உணவு சாப்பிட்டுள்ளனர்.

   சாப்பிட்டதற்கான தொகை 150 ரூபாயை கூகுள் பே மூலம் உணவக உரிமையாளர் நபீலூக்கு அனுப்பி உள்ளனர்.

  மேலும் நேற்று இரவு சிங்கராசுவின் அவரது உறவினர் ஒருவருக்கு 75 ஆயிரம் ரூபாய் கூகுள் பேயில்  25 ஆயிரம் ரூபாய் வீதம் 3  முறை கூகுள் பேயில் அனுப்பி உள்ளார்.

    இதனிடைய இன்று காலை அவரது உறவினரிடம் பணம் வந்து சேர்ந்ததா என கேட்டபொழுது அவர் பணம் வரவில்லை என கூறியுள்ளார்.

   இதனால் அதிர்ச்சி அடைந்த சிங்கராசு கூகுள் பெயில் ஆராய்ந்தபோது நேற்று உணவு சாப்பிட்டு 150 ரூபாய் அனுப்பிய அதே எண்ணுக்கு 75 ஆயிரம் ரூபாய் அனுப்பப்பட்டது தெரியவந்தது.

   இதனையடுத்து ஓட்டல் உரிமையாளரிடம் இதுகுறித்து விசாரித்தபோது அவரும் வங்கியில் கணக்கை சோதனை செய்த போது அதில் 75 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.

   இதனையடுத்து குடியாத்தம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் லட்சுமி முன்னிலையில் 75 ஆயிரம் ரூபாயை சஞ்சய் மற்றும் சிங்கராசுவிடம் ஓட்டல் உரிமையாளர் நபீல் ஒப்படைத்தார்.