வன்முறையில் ஈடுபட்டவர்களை பூட்ஸ் காலால் உதைத்த எஸ்.பி.!

த.முனிசாமி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சூளகிரி அருகே கோப்பசந்திரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களை போலிசார் துரத்தி துரத்தி பிடித்து சாலையில் முட்டி போடவைத்து அடித்து உதைத்தனர்.
இதனை எவரும் படம்பிடிக்காமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி எஸ்.பி.சாய் சரண் தேஜஸ்வி பிடிபட்ட இளைஞர்களை முட்டிபோட்ட வைத்து தனது பூட்ஸ்கால்களால் எட்டி உதைத்தார். இந்த காட்சிகளை சக போலிஸ்காரர் ஒருவர் படம் பிடித்து அதை வாட்ஸாப்பில் வெளியிட்டார்.
இது காட்டுத் தீ போல் பரவியதால் பல்வேறு தரப்பினர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் போலிசாரால் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பு:- எதுவாயினும் எஸ்.பி. பூட்ஸ்காலில் இளைஞரை எட்டி உதைத்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திலும் மாநிலமனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் அளிக்க ஒரு சாரார் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.