குடியிருப்பு பகுதியில் மனிதக்கழிவுகள்:- நகராட்சி ஊழியர்களை கண்டித்து மறியல்!

குடியிருப்பு பகுதியில் மனிதக்கழிவுகள்:- நகராட்சி ஊழியர்களை கண்டித்து மறியல்!

  கு. அசோக்,

மனிதக்கழிவுகளை குடியிருப்பு பகுதியில் வந்து கொட்டிச்சென்ற நகராட்சி ஊழியரின் மீது ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் நடத்தினர்.

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலை அருகே அமைந்துள்ள நகராட்சிக்குட்பட்ட பெரியார் நகரின் நடுவே ஒரு முனையம் உள்ளது. சேலம் சாலையையும், கிருஷ்ணகிரி சாலையையும் இணைக்கும் பகுதியாக அது உள்ளது. அந்த பகுதியில், சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.ஏற்கனவே இந்த சாலையில் குண்டும் குழியுமாக சேரும் சதவீதமாக இருக்கும் நிலையில் பாதாள சாக்கடை கழிவு நீர் கொப்பளித்து வெளியேறி துர்நாற்றம் வீசி வருகின்றது.

   இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் நகராட்சி சுகாதாரத்துறை உதவி ஆய்வாளர் எங்கிருந்தோ அள்ளிக் கொண்டு வந்த மனிதக்கழிவுகளை பெரியார் நகர் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் கொட்டியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் ஹேமாவதி துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க சொல்கிறோம் என்று உத்தரவாதம் கொடுத்ததின் அடிப்படையில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து வரிசையில் ஏற்பட்டு பரபரப்புடன் காணப்பட்டது.