சத்துவாச்சாரி மாநகராட்சி அலுவலக வாசலில் பன்றிகள் கூட்டம்! ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகளில் ஆக்கிரமிப்பு!

ஜி.கே.சேகரன்.
வேலூர்மாவட்டம்,சத்துவாச்சாரி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நோய் தொற்றும் அபாயம் உள்ளது. அதற்கு அங்கு பன்றிகள் கூட்டம் கூட்டமாக மேய்ந்துக் கொண்டிருபதே சாட்சி.
. மேலும் மனசாட்சியே இல்லாமல் ஸ்மார்ட் சிட்டி பிளாட்பாரத்தை வியாபாரிகள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து லாபம் ஈட்டி வருகிறார்கள். அதற்காக மின்சாரமும் உபயோகிக்கப்படுகிறது. இவற்றை தடுத்து நடவடிக்கை எடுக்கக்கூடியவர்களே அவர்களுக்கு உடந்தை என்பது தான் வேதனை.
சத்துவாச்சாரி பகுதி இரண்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டிருக்கும் பிளாட்பாரங்களில் ஓட்டல்களும், ஜூஸ் கடைகளும் ஆக்கிரமித்திருப்பதால், பொதுமக்களுக்கும் பள்ளி சிறார்களுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக சவுத் அவின்யூ சாலையிலிருந்து ஆர்.டி.ஓ. அலுவலக சாலையில் திரும்பியதும் அங்கு கிங் மொபைல் கடைக்கு எதிரில் பழச்சாறு கடை, போன்றவை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் வியாபாரத்துக்காக சட்டவிரோதமாக மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள்.அதே போல் ஆர்.டி.ஓ அலுவலக சாலையிலிருந்து சவுத் அவின்யூ ரோடுக்கு திரும்பியதும் வலது இடது என இரு புறமும் ஓட்டல் மற்றும் டீக்கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்து தொழில் நடத்தி வருகிறார்கள்.
இங்குள்ள விஷ்ணு பவன் ஓட்டலின் ஆக்கிரமிப்பினால் பள்ளிக்கூட பிள்ளைகளுக்கு ஏகப்பட்ட தொல்லை ஏற்படுகிறது. ஏனெனில் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகிலேயே அவர்கள் பிளாட்பாரத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ளார்கள். நீதிமன்றம் அருகிலுள்ள சித்ரா காபிபார் வாசலிலும் பிளாட்பாரத்தில் நாற்காளிகளை போட்டு முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
இதனால் பொதுமக்களுக்கு பெருத்த இடைஞ்சல் ஏற்பட்டிருக்கிறது. அதே போல், நீதிபதிகள் குடியிருப்பை சுற்றிலும் நடைபாதை அமைக்கப்பட்டு, அது மக்கள் பயன்பாட்டில் இருந்த நிலையில், அந்த பாதையை தனியார் ஒருவர் சுவர் எழுப்பி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உதவாத வகையில் தடைசெய்துள்ளார்.
கூடவே எப்போது வேண்டுமானாலும் சரியலாம் என்கிற நிலையில் உள்ள பாலத்தின் மீது மேக்கப் போட்டு வெளித்தோற்றத்தை பளிச்சிட்டு காட்டியிருக்கிறார்கள்.
மேற்படி நடைபாதையை அடைத்துவிட்டதால் நேரு நகர், இந்திரா நகர் மற்றும் 48,50,51,53, ஆகிய தெருக்களில் வசிப்போருக்கு பாதை தடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க, இவர்களுடன் போட்டி போடும் பன்றி போன்ற ஜீவன்கள் மண்டலம் இரண்டு அலுவலகம் மற்றும் பகுதி இரண்டில் முழுவதும் ஜாலியாக உலா வந்துக் கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் மண்டலம் இரண்டில் உள்ள சில அதிகாரிகள் வாடகை வாங்குகிறார்களாம். ஆகவே எங்களுக்கும் அதே மாதிரி வாடகை விடுங்களேன் என்று சிலர் கோரிக்கை வைக்கிறார்கள். இந்த கோரிக்கையை விண்ணப்பகாவும் அளிக்க திட்டமாம்
இந்த சமாச்சாரம் மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கு சென்றால் மட்டுமே அதற்கு தீர்வு கிட்டும் என்று சத்துவாச்சாரி வாழ் மக்கள் நம்புகிறார்கள்.