கொட்டும்மழையில் ஆய்வுகளை நடத்திய வேலூர் கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன்!

ஜி.கே.சேகரன்!
வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகிறது - 24 மணிநேரமும் இயங்கும் மழை பாதிப்பு குறித்தபுகார்களை தெரிவிக்க கட்டுபாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மேட்டு இடையம்பட்டி பாகாயம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்து பேட்டி
வேலூர்மாவட்டம்,கணியம்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட மேட்டு இடையம்பட்டில் ஓடையை கடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ள 50 குடும்பங்கள் உள்ளது. ஆகவே அந்த இடத்தில் பாலம் கட்டுவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார் பின்னர் பாகாயம் பகுதியில் 3 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தோட்டப்பயிர்களையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் உடன் அதிகாரிகளும் இருந்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில் வட கிழக்கு பருவமழையானது துவங்கியுள்ளது 23 மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது தொடர்ந்து எச்சரிக்கையை அளித்ததை அடுத்து நாங்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 26 இடங்கள் நீர் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது பல்துறை அலுவலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது பிர்கா தாலுக்கா அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது 3 பஞ்சாயத்துக்களில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசி அவர்களுக்கு அறிவுரையை வழங்கிவுள்ளோம்.
நாம் தற்போது கணியம்பாடி மேட்டு இடையம்பட்டி ஓடையை தாண்டி 50 குடும்பங்கள் உள்ளது அந்த மக்கள் செல்ல குறைவுள்ளதால் அதனை சரி செய்து அவர்களுக்கு வேண்டியவைகளை செய்ய சொல்லியுள்ளோம்.
கடந்த ஆண்டு எங்கெல்லாம் மழை சேதம் ஏற்பட்டதோ அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அலுவலர்களுக்குள் குழுவை ஏற்படுத்தி மக்களுக்கு இடைஞ்சலை போக்க கூறியுள்ளோம் வெள்ள காலங்களில் எதாவது குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வந்தால் முகாம்களை அமைத்து மக்களை தங்க வைத்து அவர்களுக்கு உணவுகள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் 24 மணிநேரமும் மழைக்கட்டுபாட்டு அறை செயல்படும் மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தால் அதனை சரி செய்ய ஆயத்தபணியாளர்கள் உள்ளனர் மக்கள் மழையில் வீட்டில் இருக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் ஆட்சியர் அவர்கள் துத்திக்காடு நாகநதி மயான பாதையை பார்வையிட்டு, அதை சீரமைக்க உத்தரவிட்டார்.
அடுத்ததாக புத்தூர் மதுரா, நரசிங்கபுரம் கிராமத்தில் காளான் வளர்ப்பு செய்து வரக்கூடிய பரமேஷ்வரி என்பவரின் சிறு தொழில் இடத்தை ஆட்சியர் பார்வையிட்டு அவர்களை வெகுவாக பாராட்டினார்.