மாணவிகளுக்கு 1000 ரூபாய் திட்டம்:-கலெக்டர் ஆய்வு!

த.நெல்சன்,
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் அவர்கள், குடியாத்தம் பகுதியில் உள்ள திருமகள் அரசு கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவி பெறுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதே போல் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அக்ராவரம் ஊராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் குறித்து நேரில் பார்வையிட்டார்.
மேலும் அங்குள்ள அரசு மேனிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் கற்பிக்கும் மற்றும் மாணவர்கள் கற்கும் திறன் குறித்து நேரில் பார்வையிட்டு மாணாக்களுடன் உரையாடினார்.
அப்போது கோட்டாட்சியர் வெங்கடராமன், வட்டாட்சியர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், திருமலை உட்பட பல அலுவலர்கள் வந்திருந்தனர்.