ஹூண்டாய் மோபிஸ் கம்பெனி உதவியோடு ரூ.2 கோடியில் பள்ளிகட்டிடம்!

பா.சுரேஷ்,
கிளாம்பாக்கம் அரசு மேல் நிலை பள்ளிக்கு, ஹூண்டாய் மோபிஸ் கம்பெனி உதவியோடு ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை மற்றும் கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிளாம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் மோபிஸ் இந்தியா நிறுவனத்தின் பங்களிப்புடன் யுனைடெட் வே ஆப் சென்னையுடன் இணைந்து பூமி பூஜை நடத்தினர்.
ஊரப்பாக்கம் கிரேட்டர் சிட்டி லயன் சங்கத்தின் வேண்டுகோளுக்கினங்க பள்ளிக்கு சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 10 நவீன வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் கட்டுவதற்காக இந்த பூமி பூஜை பள்ளி வளாகத்தில் போடப்பட்டது.
இதில் ஹூண்டாய் மொபிஸ் நிறுவனத்தின் சீனியர் ஜெனரல் மேனேஜர் எஸ். சுப்ரமணியன் மேலாளர் நரசிம்மன், யுனைடெட் வே சுதிர், மாவட்ட முதன்மை கல்வி மேலாளர் சி.கற்பகம், பள்ளியின் தலைமை ஆசிரியர் கனகராஜ், ஆசிரியர்கள், ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்திக் துனை தலைவர் ரேகா கார்த்திக்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், லயன் சங்கத்தின் தலைவர் பாண்டியலட்சுமி, துணைத் தலைவர் லயன் கார்த்திக்,செயலாளர் சாந்தி கார்த்திக், பொருளாளர் தேவிநேரு மற்றும் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.