குரங்குகள் தொல்லையால் அவதிப்படும் கிராமம்! நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

குரங்குகள் தொல்லையால் அவதிப்படும் கிராமம்! நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

உ.சசிகுமார்,

 வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவிற்குட்பட்ட சேர்க்காடு கிராமத்தில் கடந்த சில மாதங்களாகவே குரங்குகளால் தொல்லை அதிகரித்துள்ளது. கிராமத்தில் உள்ள வீடுகளில் இருக்கின்ற உணவுப் பொருட்களையும், வெளிப்புறங்களில் இருக்கின்ற மரம் பழ வகை கொடிகளை நாசம் செய்தும். காய் கனிகளையும் சாப்பிட்டு விடுகின்றது.

 அதுமட்டுமின்றி பெண்கள். குழந்தைகள் வீட்டை விட்டு தனியாக வெளிவர முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே அதனைப் பிடித்து காட்டில் விடுமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு. வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமரவேல் பாண்டியனிடம் கிராமப்புற மக்கள் மனு அளித்தனர்.

 அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:- எங்க ஊரு சேர்க்காடு கிராமத்தில் குரங்குகளால் தொல்லை அதிகரித்துள்ளது.  தெருகளில் ரோடு போட்டு 15 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகிவிட்டது. சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாகியும், எங்கள் கிராமங்களில் உள்ள குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் தெருக்கள் மட்டும் இன்னும் அப்படியே இருக்கிறது.

 இந்த நிலையில் எங்கள் கிராமப்புறங்களில் உள்ள தெருக்களை சீரமைத்து புதியதாக சிமெண்ட் சாலையோ அல்லது தார் சாலையோ அமைத்து தர வேண்டும்.

  மேலும் எங்கள் கிராமங்களில் இருந்து பல்வேறு பணிகளுக்காக சின்ன தெரு முதல் ஏரிக்கரை வழியாக செல்லும் சாலை (ஆரம்ப சுகாதார நிலையம், திருவலம் பஜார் பகுதி, வாலாஜா, இராணிபேட்டை பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியவும், வேலைக்கு செல்வோர் அதிகம்.

  எனவே அந்த வழியை பயன்படுத்த புதிய சிமெண்ட் சாலை அமைத்து தருதல். மேலும் எங்கள் கிராமங்களில் கல்வாய்கள் பாழ்பட்டுவிட்டது. மழை பெய்து கல்வாய்கள் நிரம்பி தெருவுகளிலும் நீர் ஓடும் நிலையும் உள்ளது தெருவில் ஓடும் மழை நீரும் கலந்து சாக்கடை நீராக மாறி குடிநீருடன் கலந்து வருவது போன்ற சூழல் உள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

  மேற்படி குறைகளை சரி செய்து தருமாறு ஊர் பெரியவர்களுடன் இணைந்து இளைஞர்கள் மோகன், வி.வசந்தகுமார், கீ.வசந்தகுமார், சாமுவேல், சுபாஷ் ஆகியோர் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.