கள்ளசாராயம் குறித்த தகவலை எனக்கு தெரிவிக்கலாம்! ரகசியம் காக்கப்படும் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகவல்!

கள்ளசாராயம் குறித்த தகவலை எனக்கு தெரிவிக்கலாம்! ரகசியம் காக்கப்படும் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகவல்!

R.Ramesh,

    கள்ளசாராயம் குறித்த தகவலை எனக்கு தெரிவிக்கலாம்! யார் தகவல் அளித்தது என்கிற ரகசியம் காக்கப்படும் என ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் தகவல்!

  திருப்பத்தூர் மாவட்டம், மாவட்டம் முழுவதும், ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று 11 குறுங்காடுகள் 208 பஞ்சாயத்துக்களிலும் 37,575 மரங்கள்  நடப்பட்டுள்ளது என ஆட்சித்தலைவர் தகவல்.

  திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் கதிரிமங்கலம் ஊராட்சி, மாடப்பள்ளி ஊராட்சி கந்திலி ஊராட்சி ஒன்றியம் ஆதியூர் ஊராட்சி, ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் மண்டலவாடி ஊராட்சி, கேத்தாண்டப்பட்டி ஊராட்சி, நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் பந்தாரப்பள்ளி ஊராட்சி, மல்லகுண்டா ஊராட்சி, மாதனூர் ஊராட்சி ஒன்றியம் மிட்டாலம் ஊராட்சியில் ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குறுங்காடுகள் அமைத்தல் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.தேவராஜி, திரு.அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்கள்.

 அதனைத் தொடர்ந்து மாடப்பள்ளி ஊராட்சியில் 25 தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.

  பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்கள் தான் அனைத்து பகுதிகளையும் அழகாக வைத்துக் கொண்டிருக்கின்றனர், மற்ற அனைவரும் குப்பை போடுபவர்களாக தான் இருக்கிறார்கள், அவர்கள் அனைவரும் குப்பைக்காரர்கள் தான் நீங்கள் மட்டும் தான் தூய்மை காவலர்கள்.

  அனைவரும் சாலை ஓரங்களில் பொது இடங்களில் குப்பை போட்டுவிட்டு செல்கின்றனர். ஒரு கிராமத்தில் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது ஆலமரத்தை சுற்றி குப்பைகளாக இருந்ததை அறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குப்பைகளை அகற்றி நாற்காலி அமைக்கப்பட்டு, இப்பொழுது அழகாக காட்சியளிக்கிறது, அனைவரும் அதனை அமர்வதற்காக பயன்படுத்துகின்றனர். அனைவரும் மரக்கன்றுகளை நட வேண்டும், இன்றைய தினம் மட்டுமே முப்பதாயிரம் மரக்கன்றுகளை நடுகிறோம்.

 ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிகின்ற நெகிழிப் பொருட்களை பயன்படுத்துவதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும், இதனை செய்தீர்கள் ஆனால் 90 சதவீதம் குப்பைகள் குறைந்து விடும். ஊராட்சிகள், நகரை அழகாக வைத்துக்  கொள்வது என்பது பெருமை கொள்கின்ற விஷயம், ஒருவர் நமது ஊருக்குள் நுழைகின்ற பொழுது ஒரு அழகான நகரமாக காட்சியளிக்கப்பட வேண்டும், அதற்கு அனைவரும் தொடர்ந்து முயற்சி எடுத்து சரி செய்து வருகின்ற பொழுது அழகான நகரமாக இந்த திருப்பத்தூர் மாவட்டத்தையும் அனைத்து நகராட்சிகளையும் உருவாக்க முடியும்.

   மேலும் கிராமங்களில் எந்த ஒரு நபர் கள்ளச்சாராயம் காய்ச்சு விற்றாலும் என்னுடைய தொலைபேசிக்கு அல்லது மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு தகவல் அளிக்கலாம் தகவல் அளிக்கும் நபரின் ரகசியம் காக்கப்படும். மெத்தில் ஆல்கஹால் மற்றும்  எத்தில் ஆல்கஹால் என்று இரண்டு வகையான மதுபானங்கள் உள்ளது. மெத்தில் ஆல்கஹால் மற்றும் எத்தில் ஆல்கஹால் உடைய நிறம் வாசன் ஒரே மாதிரியாக இருக்கும்.

 பிற மாவட்டங்களை காட்டிலும் நமது மாவட்டத்தில் வேகமாக செயல்பட்டு இருக்கின்றோம்.

  ஏப்ரல் மாதத்தில் மட்டும் 143 வழக்குகள் பதியப்பட்டுள்ளன, மே மாதத்தில் 88 வழக்குகள் பதியப்பட்டுள்ளன,   மெத்தில் ஆல்கஹாலை தண்ணீரில் கலந்து கொடுப்பதினால் கண் பார்வை  மற்றும் இறக்கவும் நேரிடும்.

கிராமங்களில் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அவர்களிடம் உள்ள பைகளை பாருங்கள், பள்ளி அருகில் உள்ள கடைகளில் எந்த பொருட்களையும் வாங்கி சாப்பிடக்கூடாது என்று அறிவுறுத்துங்கள். அனைவரும் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களிடம் பிள்ளைகளை பற்றி எப்படி நடந்து கொள்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.

   பின்னர் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சியில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துக் கொண்டார்.

  இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் திரு.செல்வராசு, உதவி இயக்குனர் ஊராட்சிகள் திருமதி.விஜயகுமாரி, ஒன்றிய குழு தலைவர் திருமதி.சத்யா சதீஷ்குமார், திருமதி.வெண்மதி, ஒன்றிய குழு துணைத் தலைவர் திரு.தேவராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி.உமா, ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமதி.மாரி இளையராஜா, திருமதி.கோமதி கார்த்திகேயன், நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

வெளியீடு : செய்திமக்கள் தொடர்பு அலுவலர்,திருப்பத்தூர் மாவட்டம்.