தமிழக அரசை மிரட்டும் ஜாக்டோஜியோ!

ஜி.கே.சேகரன்,
தமிழக முதல்வர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையான பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவது அத்து கூலி முறையை ஒழித்து தொகுப்பூதியம் மதிப்பூதியம் வழங்க வேண்டும் பணி வரன் முறை சரண்விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி நடக்கு மனித சங்கிலி போராட்டத்தில் திரளானோர் பங்கேற்பார்கள் ஜாக்டோஜியோ உயர்மட்ட கூட்டத்தில் முடிவு - ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன் பேட்டி.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் காட்பாடியில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் ஜனார்த்தனன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் தீனதயாளன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஜாக்டோ ஜியோ பேரமைப்பில் இணைந்துள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்ட பொருளாளர் கற்பகமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் வில்வநாதன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் இளங்கோ, தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் அஜீஸ்குமார், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் பாபு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
மார்ச்-24ல் மனித சங்கிலி போராட்டம் வேலூர் மாவட்டத்தில். வேலூர் காந்திசிலை, அணைகட்டு, பேர்ணாம்பட்டு மற்றும் கே.வி.குப்பம், வட்டார வளர்ச்சி அலுவலகம், காட்பாடி, குடியாத்தம், வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடக்கவுள்ளது இதில் திரளானோர் பங்கேற்ற்று பங்கேற்பு புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அகவிலைப்படி 4%சதவீதம் கடந்த 1.7.2022முதல் வழங்கிட வேண்டும்.
சரண்விடுப்பு தடை ஆணையை ரத்து செய்து சரண்விடுப்பு சம்பளம் பெற தமிழக அரசு உத்தரவு வழங்க வேண்டும். வெளிமுகமை முறையில் அத்து கூலிகளாக தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தற்காலிகமாக அரசாணை எண்.115;139;152ன்படி நியமனம் செய்வதை ரத்து செய்து தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 6லட்சம் பணி இடங்களை உடனடி யாக நிரப்பிட வேண்டும்.
தொகுப்பு ஊதியம், சிறப்புஊதியம், மதிப்பூதியம் போன்றவற்றில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர்க்கு கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அரசு துறையில் பணி புரியும் ஊழியர்களை அத்துக்கூலிகளாக மாற்றும் அரசாணை 115, 139, 152 ரத்து செய்ய வேண்டும். அதே போல் இளைஞர்களின் வேலை வாய்ப்பை கேள்விக் குறியாக்கும் அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும்உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பின்னர் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஜாக்டோ ஜியோவின் சார்பில் வரும் 24 ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் எழுச்சியாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
சட்டபேரவையில் எங்களின் வாழ்வாதார கோரிக்கையை முதலமைச்சர் அறிவிப்பார் என எதிர்பார்த்தோம் குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்ட அமல் சரண் விடுப்பு தொகுப்பூதிய மதிப்பூதியம் வழங்க வேண்டும். அத்துகூலி முறை ஒழிப்பு பணி வரன் முறை உள்ளிட்ட கோரிக்கையை முன் வைத்து முதலமைச்சர் அதனை செய்வதாக அறிவித்தார்.
ஆனால் எங்களின் மகிழ்ச்சி நிலைக்கவில்லை நேற்று சட்டபேரவையிலும் அறிவிக்கவில்லை எங்களின் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் 24 ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் செய்ய உள்ளோம்.
காட்பாடி தாலுக்கா அலுவலகம் முதல் குடியாத்தம் சித்தூர் நெடுஞ்சாலை வரையில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் மனித சங்கிலியில் ஈடுபடவுள்ளோம் அரசு எங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கூறினார்.