உதவியாளருக்கு குடை பிடித்த கலெக்டர்!

 உதவியாளருக்கு குடை பிடித்த கலெக்டர்!

க.பாலஜோதி,

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் வரும் டிசம்பர் 26 ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. அதன் முன்னேற்பாடுகளை குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திடீரென மழை பெய்தது. உடனே கலெக்டரின் டவாலி  குடையை எடுத்து வந்து மழையில் கலெக்டர் நனையாமல் இருக்கும்படி பிடிக்க முயன்றார்.

  அதை பார்த்த கலெக்டர் தனது உதவியாளரிடமிருந்து குடையை வாங்கி தானும் நனையாமல் தன் உதவியாளரும் நனையாதபடிக்கு அவரே குடையை பிடித்துக்கொண்டதுடன், உதவியாளரின் தோளில் கை போட்டு அரவணைத்து  சென்றார்.