எங்களுக்கு அதிகம் பேட்டா கொடுங்க! வெள்ள நிவாரண பணி ஆசிரியர்கள் மிரட்டல்!

உ.சசிகுமார்,
சென்னையை புரட்டி போட்ட வெள்ளம் ஒருபுறம் இருக்க அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில முழுவதிலிருந்தும், அயல்நாட்டினரும் உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்கள். ஆனால் சில ஆசிரியர்களும் ஆளும் கட்சியினர் சிலரும் தில்லாலங்கடிகளை செய்து வருகிறார்கள்.
தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டிருக்கிறது அதை நடைமுறைப்படுத்தவும் முயற்சி வருகிறது. அந்த 6000 ரூபாய் வழங்கும் விஷயத்தில் ரேஷன் ரேஷன் கடைகளில் டோக்கன் கொடுத்து வருகிறார்கள்.
அந்த டோக்கனை யாருக்கு வழங்க வேண்டும் என்று திமுக கட்சியினர் தனி டோக்கன் வழங்கி வருகிறார்கள்.
அதைக் கண்ட உள்ளூர் பிரமுகர்கள், கட்சி சார்பாக டோக்கன் வழங்கிய வரை விரட்டி இருக்கிறார்கள்.
சென்னை அண்ணாநகர் தொகுதியில் 103 வார்டு, திமுகவைச் சேர்ந்த வட்ட செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள்¢ குறுக்கிட்டு டோக்கன் கொடுத்தனர்.
இதில் அவர்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமே புகார் எழுந்ததால் பிரச்சனை ஏற்பட்டது.
இது ஒரு புறம் இருக்க அரசு வெள்ள நிவாரணம் வழங்கும் பணிகளுக்காக ஆசிரியர்களை அரசு நியமித்துள்ளது அதற்காக அவர்களுக்கு ஒரு நாளுக்கு 200 ரூபாய் அளிக்கிறது. இதை ஏற்றுக் கொள்ள மறுத்த ஆசிரியர்கள் ஸ்டிரைக் செய்தனர்.
குறிப்பாக எழும்பூரில் கல்வி அலுவலகத்தில் வெளியில் நின்று கொண்டு பணி செய்ய மாட்டோம் என்று போராடினர்.
இதைப் பார்த்த மக்கள் வெள்ள நிவாரணத்துக்காக அரசு மற்றும் பல்வேறு தரப்பு மக்களுக்காக உதவிக்கரம் நீட்டும் நிலையில் அரசு ஊழியர்கள் இப்படி செய்யலாமா?
லட்சக்கணக்கில் சம்பளமாக பெரும் அரசு பள்ளி ஆசிரியர்கள் இந்த மாதிரி இக்கட்டான நேரத்தில் போராட்டம் நடத்தலாமா? மக்கள் பாதிப்பில் இருக்கும்போது அவர்களுக்கு உதவி செய்வது அரசு ஊழியர்களின் கடமை அல்லவா இவர்கள் பணி என்று எப்படி இருக்கிறது என்று இதுவே சாட்சி.
இவர்களுடைய பணிக்கு ஏற்ற ஊதியம் தான் வழங்கப்பட வேண்டும் என்றால் ஒரு மாதத்திற்கு 10,000 கூட அதிகம் தான் இவர்களுக்கு என்பது பலருக்கே தெரியும் அல்லவா.