காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட மாநகராட்சி ஆணையர்! நேர்மைக்கு கிடைத்த பரிசா?

டி.முகமது இர்பான்,
கரூர் மாநகராட்சி ஆணையர் நேர்மையாக நடவடிக்கை எடுக்கிறார் என்று பாராட்டுகளை பெற்ற நிலையில் அவரை காத்திருப்பு பட்டியலில் வைத்திருக்கிறாது நிர்வாகம்.
நேர்மையாக பணியாற்றக் கூடிய அரசு அதிகாரிகளை ஆளுங்கட்சியினை சேர்ந்த பிரமுகர்கள் பணி செய்ய விடாமல் தடுப்பதுடன் அவர்களை பணி மாறுதல் செய்வதற்கு சிபாரிசு செய்து பல்வேறு தொல்லைகளை கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் சுகாதார பணிகளின் இணை இயக்குனர் மாரிமுத்து என்பவரை பொலிட்டிக்கல் பிரஷர் காரணமாக தடாலாடியாக மாற்றி விட்டனர் அதேபோல் தற்பொழுது கரூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
கரூர் மாநகராட்சியின் ஆணையராக கடந்த மூன்ற் உ மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டவர்¢ சரவணகுமார்.
ஆணையராக பதவி ஏற்றுக்கொண்ட சரவணக்குமார் நேர்மையான அதிகாரி என்று பெயர் பெறும் அளவுக்கு பணியாற்றினார். அவர் எடுத்த நடவடிக்கைகள் மக்களின் பாராட்டுதலை பெற்றது.
குறிப்பாக பாஜக, திமுக போன்ற கட்சிகளின் சார்பில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அதிரடியாக அகற்றினார். அதேபோல் கழிவுநீர் கால்வாய்களுக்கு மேல் அமைக்கப்பட்டு இருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளையும் ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து தள்ளி இருக்கிறார். காமராஜ் மார்க்கெட் பகுதி ஆக்கிரமிப்புகளை வாஷவுட் செய்திருக்கிறார்.
மேலும் பண்டிகை காலங்களில் தரைக்கடை வைத்திருப்பவர்களிடம் சுங்க வசூல் செய்யக்கூடாது என்று மாநகராட்சி ஊழியர்களுக்கு அதிரடியாக உத்தரவு போட்டார்.
இருந்தாலும் ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர் சிறு வியாபாரிகளிடம் சுங்க வசூல் கேட்டு மிரட்டி இருக்கிறார்கள்.
அது குறித்து வியாபாரிகளை சந்தித்த ஆணையர் சரவணகுமார் இனி யாரும் சுங்கம் செலுத்த வேண்டாம் எது இருந்தாலும் என்னிடம் முறையிடலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
இதையெல்லாம் பொறுத்துக் கொள்வார்களா அரசியல்வாதிகள், பொங்கி எழுந்து அவரை அதிரடியாக மாற்றம் செய்ய பிரஷர் கொடுத்தனர். அரசுக்கு ஜால்ரா போடும் உயர் அதிகாரிகளோ ஆளுங்கட்சியினர் சொல்லிவிட்டதால் நேர்மையான மாநகர ஆணையர் சரவணக்குமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்திருக்கிறார்கள்.
சரவணகுமாரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட பின்னர் ஆளுநர்ச்சியை சேர்ந்த சிலர் மாநகராட்சி முன்னர் வான வேடிக்கை விட்டு மகிழ்ந்தனர்
நியாயமான ஆட்சி நடக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இரவும் பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் இது போன்றவர்களால் ஆட்சிக்கு தானே கெட்ட பெயர்.