காரிய கமிட்டி மேட்டரை ஊடகங்களில் கசிய விட்டது தவறு! குலாம் நபி ஆசாத்தை சாடிய தமிழக காங்... தலைவர்!

காரிய கமிட்டி மேட்டரை ஊடகங்களில் கசிய விட்டது தவறு! குலாம் நபி ஆசாத்தை சாடிய தமிழக காங்... தலைவர்!

  ஜி.கே.சேகரன்,

 குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் காரிய கமிட்டியை கூட்ட வேண்டுமென ஊடகங்களில் கசியவிட்டது தவறானது - அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியுமில்லை காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி.

 இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பிரச்சாரத்தில் ஈடுபட்டு பேசினார்.

 இந்த கூட்டத்தில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் உள்ளிட்ட திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.

 ன்னர் காங்கிரஸ் தலைவர் அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றியை மேம்படுத்த இந்த சுற்றுபயணத்தை மேற்கொண்டுள்ளோம்.

 வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது, எங்களது கூட்டணியை மக்கள் நேசிக்கின்றனர். நாங்கள் போட்டியிடும் எல்லா இடங்களிலும் வெல்வோம்.

  எனக்கு மிகுந்த மன நிறைவை இந்த தேர்தல் அளித்துள்ளது.

  தமிழக மக்கள் தவறாக திமுகவுக்கு வாக்களித்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து அழகரியிடம் கேட்டதற்கு, அவர் சர்வாதிகார கட்சியின் மாநில பிரதிநிதி, அவருக்கு அப்படி தான் தோன்றும்.

  நான் அறிந்தவரையில் மக்கள் சரியாக வாக்களித்துள்ளனர்.

  நீட் தேர்வுக்காக ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டது, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது, நிச்சயம் இந்த தீர்மானம் வெற்றி பெறும்.

 அதிமுக முன்னாள் அமைச்சர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனையை குற்றச்சாட்டு அடிப்படையில் தான் விசாரித்து செய்கின்றனர்.

  குற்றமற்றவர்கள் என நிருபிக்க வேண்டியது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தான் இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சியில்லை.

 அரசியல் கட்சியின் தேசிய செயலாளர் அவ்வாறு பேசுவது தவறானது ஊடகங்கள் பிஜேபிக்கு ஆதரவாக உள்ளது.

   மோடிக்கு இம்முறை அமெரிக்காவில் வரவேற்பில்லை, ஆனால் இந்திய ஊடகங்கள் மோடிக்கு வரவேற்புள்ளதை போல் காட்டுகிறது.

 இதனை ஏன் ராகுலுக்கோ ,ஸ்டாலினுக்கோ செய்யவில்லை.

 காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டுமென குலாம் நபி ஆசாத் சொல்லியிருக்கிறார், காங்கிரசின் தலைவர் சோனியா காந்தி காரிய கமிட்டியை கூட்டும் முடிவை அவர் தான் எடுக்க வேண்டும்.

  ஆனால் அவரை சந்தித்து குலாம் நபி ஆசாத் கூறாமல் ஊடகங்கள் மூலம் குலாம் நபி ஆசாத் காரிய கமிட்டியை கூட்ட வேண்டும் என நினைப்பது தவறானது. 10 ஆண்டுகளில் ராகுலோ, சோனியாவோ நினைத்திருந்தால் பிரதமராக வந்திருக்கலாம். ஆனால் அவர் அதனை செய்யவில்லை யாருக்கு எந்த யோசனை வேண்டுமானாலும் சோனியா காந்திக்கு நேரடியாக சொல்லலாம் என்று கூறினார்.