நடிகர் சிரஞ்சீவியை வலிக்கும் ஆந்திர காங்கிரஸ்!

நடிகர் சிரஞ்சீவியை வலிக்கும் ஆந்திர காங்கிரஸ்!

வி.டி.வித்யாசாகர்,

  'தெலுங்கு கதாநாயக நடிகரை வலித்து இழுக்க ஆந்திர மாநில காங்கிரஸ் திட்டம் போட்ட்டு அதற்காக மூச்சு வாங்கிக்கொண்டிருக்கிறார்களாம்.

 ஆந்திராவில் பிரஜா ராஜ்யம் என்று தனியா ஒரு கட்சி தொடங்கி தோற்றப் போனவர் 'நடிகர் சிரஞ்சீவி" அவரை  காங்கிரஸ் இழுத்து வைத்திருந்த போதிலும்,  சமீபத்துல, ஆந்திராவுல நடைபயணம் வந்த ராகுலையும் அவர் சந்திக்கவில்லை.

 இந்த நேரத்துல அவரது தம்பி பவன் கல்யாண் நடத்துற ஜனசேனா கட்சியில சேரப் போறார்னு ஒரு தகவல் வெளியானது.

 இதையறிந்த கை பார்ட்டி அதை  தடுக்கின்ற வகையில, சிரஞ்சீவிக்கு ஆந்திர மாநில காங்., பொதுக்குழு உறுப்பினர் பதவி தூக்கி கொடுத்தது.

   சிரஞ்சீவியிடம், அதற்கான கடிதத்தை ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான சி.டி. மெய்யப்பனும், அந்த மாநில காங்., தலைவர் சைலஜாநாத்தும் நேர்ல போய் கொடுத்து மூச்சு வாங்க அவரை இழுத்துள்ளார்கள்.

 அவ்ளோ பெத்த மனுஷனா அவரு?