முப்பது ஆண்டுகளாக அரசு அலுவலர்களை பார்க்காத சாலை!

முப்பது ஆண்டுகளாக அரசு அலுவலர்களை பார்க்காத சாலை!

K.Ashok,

  அரசு அலுவலர்கள் முப்பது ஆண்டு காலமாக சாலையை சீரமைக்காததால்,   அவற்றை சீதூக்கியுள்ளார் சமூக ஆர்வலர்.  

   திருப்பத்தூர் மாவட்டம்,  ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பாச்சல் பஞ்சாயத்து ஜெய்பீம் நகர் குருமன்ஸ் காலனி உள்ளிட்ட ஒன்பதாவது வார்டு பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

  அது மட்டுமன்றி பாச்சல் கிராமம், ஜெய்பீம்நகர், வள்ளுவர் நகர், குருமன்ஸ் காலனி, கலலூர் எனப் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திருப்பத்தூக்கு செல்ல இவ்வழியைதான் பயன்படுத்தி வருகின்றனர்.

  பள்ளி மாணவ-மாணவிகள் பொதுமக்கள் என சுமார் ஒரு நாளைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணித்து வருகின்றனர்.

   இதனையடுத்து இந்த வழியை  சரி செய்து தர பொதுமக்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக துறை சார்ந்த அலுவலர்களிடம் மனு அளித்து வந்தனர். இதனை  இதுவரை எவரும் கண்டுகொள்ளவில்லை.

  இந்நிலையில் சமூக ஆர்வலர் தேவன் தனியாளாக களம் இறங்கி அவருடைய சொந்த செலவில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிலான தற்காலிக சாலையை அமைத்து தந்தார்.

  அதேபோல் இதுவரை சாலையே இல்லாத இடத்திலும் ஜேசிபி எந்திரத்தின் மூலம் தற்காலிக சாலையை அமைத்துக் கொடுத்தார்.

 அந்த சமூக ஆர்வலரின் பெயர் தேவன்.