மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி!

கு.அசோக்,
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. தலைமையில் கொத்தடிமை ஒழிப்பு உறுதி மொழியை அரசு அதிகாரிகள் ஏற்றுகொண்டனர்.
இந்திய ஜனநாயக நாட்டில் அனைவரும் சமமாக நடத்த வேண்டும் மக்கள் அனைவரையும் சுயமரியாதையுடன் நடத்திடவும் கொத்தடிமை தனத்தை ஒழிக்க வேண்டுமென ஆட்சியர் உறுதி மொழியை வாசிக்க பின் தொடர்ந்து அரசு அலுவலர்கள் உறுதிமொழியை ஏற்றுகொண்டனர்.