ஆட்சியர் துவக்கிவைத்த விழிப்புணர்வு பேரணி!

ஜி.கே.சேகரன்,
வேலூரில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
சர்தார் வல்லபாய்பட்டோர் பிறந்த தினமான இன்று வேலூர்மாவட்டம், வேலூர் கோட்டை அருகிலிருந்து விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் துவங்கி வைத்தார்
ஆக, இன்று தேசிய ஒற்றுமை தினம் என்பதால், ஒற்றுமையை வலியுறுத்தி இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்துக் கொண்டனர்/.
அவர்கள் கையில் நம் தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படி ஊர்வலமாக நகரின் முக்கியவீதிகளின் வழியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
இதில் வேலூர் மாநகர மேயர் சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அதேபோல். வேலூரில் அரசினர் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர் - ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் ஊழல் தடுப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை அதிகாரிகள் ஏற்றனர்
வேலூர்மாவட்டம்,வேலூரில் சர்தார் வல்லபாய் பேட்டலின் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் அண்ணா சாலையில் உள்ள அரசினர் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியை தூய்மைப்படுத்தும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தூய்மை செய்யும் பணியை துவங்கி வைத்தார் இதில் மாணவர்கள் பள்ளி முழுவதும் குப்பைகளை அகற்றினார்கள்
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் லஞ்சம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாகனம் துவங்கி வைத்து பின்னர் ஊழல் தடுப்பு உறுதி மொழி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியை அரசு ஊழியர்கள் ஏற்றுகொண்டனர்.