பட்டா இடத்தை மீட்டு தாங்க...இல்லைன்னா...?

கு.அசோக்,
பட்டா இட ஆக்கிரமிப்புகளை அகற்றி உரிய பயனாளிகளுக்கு வழங்க பொதுமக்கள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
வேலூர்மாவட்டம்,பேரணாம்பட்டு சிவராஜ் நகர் பகுதியில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கடந்த 1999ஆம் ஆண்டு நில எடுப்பு செய்து 86 பயனாளிகளுக்கு இட ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கப்பட்டது.
இதில் சில நபர்கள் ஆந்த இடங்களில் குடியிருப்புகள் அமைத்து வசித்து வந்தனர். மேலும் சிலர் புலம்பெயர்ந்து பல்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனா.
¢ இந்நிலையில் தற்போது பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்ட பட்டா இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து சில நபர்கள் வீடுகள் கட்டியுள்ளதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் மற்றொரு தரப்பினர் தங்களுக்கு கொடுத்த பட்டா இடங்களில் தான் வீடுகள் கட்டி உள்ளோம் என்று கூறுகின்றனர்.
அதேபோல் பூங்கா மற்றும் பொதுக்கழிப்பிடம் நூலகம், விளையாட்டு, திடல் ,உள்ளிட்ட எதிர்கால தேவைக்கான பொது இடத்தை ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இடம் ஒதுக்கப்பட்டது.
அந்த இடமும் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
¢ இந்நிலையில் பேரணாம்பட்டு சிவராஜ்நகர் பொதுமக்கள் வட்டாட்சியர் வெங்கடேசன் இடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் தங்கள் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் குடியுரிமையான வாக்காளர் அடையாள அட்டை ,ரேஷன் கார்டு , பாஸ்போர்ட், லைசன்ஸ், எதுவுமே எங்களுக்கு தேவையில்லை அனைத்தும் நாங்கள் தாலுக்கா அலுவலகத்தில் ஒப்படைக்கப் போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.