பனைமரம் ஏற நவீன கருவிகளை வழகிங்கிய எம்.பி கனிமொழி!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
பனை ஏறும் கருவிகளை வழகிங்கிய எம்.பி கனிமொழி அதை பயன்படுத்தும் விதம் குறித்தும் நேரில் பார்வையிட்டார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அந்தோணியார் புறத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற பனை ஏறும் கருவி செயல்விளக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டனர்.
அப்போது அக்கருவியினை எம்.பி.கனிமொழி பயனாளிகளுக்கு வழங்கினார். வழங்கியதோடில்லாமல் அந்த கருவியை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை நேரில் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மற்றும் வேளாண்மை துணை இயக்குனர்கள், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.