அம்மா கிளினிக்குகள் புஸ்ஸ்ஸ்.....! அமைச்சர் தகவலால் பரபரப்பு!

அம்மா கிளினிக்குகள் புஸ்ஸ்ஸ்.....! அமைச்சர் தகவலால் பரபரப்பு!

மிகு ஒளியான்,

  கடந்த அ.தி.மு.க.ஆட்சி அதன் மூச்சை நிறுத்தும் நேரத்தில் ஜெயலலிதா பெயரில் அம்மா கிளினிக்குகளை துவக்கினர்.

   அவ்வளவாக அந்த திட்டத்துக்கான ஏற்பாடுகளை அந்த ஆட்சியாளர்கள் செய்யவில்லை.

    இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் அம்மா மினி கிளினிக் மூடப்படுவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக இந்தத் திட்டத்தை மூடுகிறார்கள்' என்று கூவியுள்ளார் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி,

    இது பற்றின விவரம் வருமாறு,

   சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை இன்று செவ்வாய்க்கிழமை காலையில் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார்.

     அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டமானது ஓராண்டு திட்டத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது.

    பல இடங்களில் இது தற்காலிக மருத்துவமனையாகத்தான் இருந்துள்ளது. தற்போதைய ஆட்சியில் நீண்டகால மருத்துவத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றிய மருத்துவர்கள் வேறு பணிகளுக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மார்ச் 31 வரையில் கொரோனா பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் கூடுதலாக 1,820 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களும் கொரோனா பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்,'' என்றார்.

மேலும், ''அம்மா மினி கிளினிக்குகளால் எவ்வளவு பேர் சிகிச்சை பெற்றார்கள் என்ற விவரத்தை அ.தி.மு.கவால் தர முடியுமா?' எனவும் மா.சுப்ரமணியன் கேள்வி எழுப்பினா£.

    அரசின் இந்த அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர்¢ பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ''ஏழை எளிய மக்கள் கிராமப்புறங்களிலும் நகரப் பகுதிகளிலும் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு அம்மா பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இத்திட்டம் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்துக்குரியது. இது ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு'' என விமர்சித்துள்ளார்.

  தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆட்சிக் காலத்தில் 1950 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. ஆனால், இந்தத் திட்டம் உருவாக்கப்பட்ட நோக்கத்தை அடையவில்லை எனவும் இதனை மூடுவதன் மூலம் மாதம்தோறும் 26 கோடியே 71 லட்சத்தை சேமிக்க முடியும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், 196 மினி கிளினிக் கட்டடங்களை நகர்ப்புற சுகாதார மையங்களாக மாற்றுவதற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.