குழந்தைகளை கொஞ்சிய அமைச்சர் எ.வ.வேலு!

டி.முகமதுஇர்ஃபான்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூரில் இருந்து உள்ளி வழியாக குடியாத்தம் செல்லும் தரைப்பாலம் பாலாற்று வெள்ளத்தில் சேதமடைந்துள்ளது. இதனை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் ஆம்பூர் அடுத்த மின்னூர் இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வில்வநாதன் மற்றும் தேவராஜ் ஒன்றியக்குழு பெருந்தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வு பணிக்கிடையே அமைச்சரை காண வந்தவர்கள் மத்தியில் இருந்த குழந்தைகளை எ.வ.வேலு அவர்கள் கொஞ்சி மகிழ்ந்தார்.
மருத்துவமனை ஆய்வு,
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அரசு கூடுதல் தலைமை செயலாளரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான திரு.தென்காசி. எஸ்.ஜவஹர். இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா. இ.ஆ.ப.,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். கி.பாலகிருஷ்ணன்,வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் ஜி.செந்தில்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரு.கு.செல்வராசு ,டி.எஸ்.வக்கீல் அஹமத் மு.க. மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.