டிடிவி எங்கேப்பா ஆளையே காணோம்! சசிகலா கழற்றிவிட்டுட்டாரா!

ம.பா.கெஜராஜ்,
கடந்த ஜனவரி மாதம் கர்நாடக மாநிலம், பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியில் வந்த சசிகலாவின் குறி அ.தி.மு.க. வை கைப்பற்றுவதிலேயே உள்ளது.
ஆனால்,அதற்கு வாய்ப்பில்லை ராசா என்று எடப்பாடியும், ஜெயக்குமாரும் கோரசாக குரலெழுப்பி வருகிறார்கள். அதற்காக அவர் பல்வேறு தருணங்களை வித்தியாசமாக ஹேண்டில் செய்து நியூஸாகி வருகிறார்.
இந்த சூழலில் டிடிவி தினகரன் சசிகலாவுடன் காணப்படவில்லை.
அ.தி.மு.கவின் பொன்விழாவையொட்டி கடந்த 17 ஆம் தேதி சசிகலா கோயிலுக்குச் சென்றார். அப்போது இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் மட்டுமே உடனிருந்தார்.
பின்னர் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று சசிகலா அஞ்சலி செலுத்தி கண்கலங்கினார், தம்மை புரட்சித்த்தாய் என அழைத்துக் கொண்டார்.
இந்த நடிப்புக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்' என்றார் ஜெயக்குமார்.
பின்னர், தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் அ.தி.மு.க கொடியை ஏற்றிய சசிகலா, அவரை அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்த கல்வெட்டை திறந்தார். பின்னர், அங்கிருந்து ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றார்.
இப்படி அ.தி.மு.க. வுக்கு வலைவிரித்து திரியும் சசிகலாவின் பயணங்களில் டி.டி.வி தினகரன் காணவில்லை.
சசிகலாவின் அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் தினகரனை ஒதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
தினகரனை சசிகலா ஒதுக்க, சசிகலாவை அதிமுக ஒதுக்க இதில் சிக்கி சிதறுவது சாட்சாத் அ.ம.மு.க. தான்.
சிட்டி சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரையில் அ.தி.மு.கவில் சசிகலாவுக்கும் உரிமை உள்ளது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் அ.தி.மு.க நிர்வாகிகள் செயல்பட முடியும்" என்று கருத்து சொல்லியிருக்கிறார் பெங்களூரு புகஸேஷ்தி. சிவில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தினகரன் வாபஸ் பெற்றுவிட்டார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம்.
இந்நிலையில் சசிகலா அ.தி.மு.க.தலைமை கழகத்தினுள் நுழையக் கூடாது என்பதற்காக, ஏராளமானவர்களை பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அ.தி.மு.க. வின் தலைமைக் கழக கணக்குகளை பார்க்க வேண்டும் என்று சசிகலா நீதிமன்ற அனுமதி பெற்று வந்தால் அவரை எப்படி தடுக்க முடியும்?
அதே நேரத்தில் சசிகலா பயணிக்கும் பகுதிகளில் அ.ம.மு.க நிர்வாகிகளை பார்க்க முடிகிறது. சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட அனைவரும் சசிகலா பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.அப்படின்னா அ.ம.மு.க.வின் ஷெட்டரை தற்போதைக்கு மூடுவதுதான் நல்ல முடிவாக இருக்கும் என்கிறார்கள். அதற்கு வசதியாகவே டிடிவி ஓரமாக நிற்கவைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க ஆளுங்கட்சியானது, அ.தி.மு.கவை பலவீனப்படுத்துவதற்கு முயன்று வருகிறாது. அதற்காக அதன் தலைவர்கள் பலவீனப்பட்டு வருகிறார்கள். ஆனாலும் தொண்டர்கள் உற்சாகத்துடன் தான் உள்ளனர்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடிக்கு சிக்கல் அவருக்கு மிக மிக நெருக்கத்தில் உள்ளது.
இவையெல்லாம் சசிகலாவுக்கு பலன் கொடுக்கக்கூடிய விஷயங்களாக பார்க்கப்படும் நேரத்தில் டிடிவி எங்கேப்பா என்கிற குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.