ரோப்கார் பணியை சீக்கிரம் முடிக்க அமைச்சர் அட்வைஸ்!

ஜி.கே.சேகரன்,
ரோப்கார் பணியை சீக்கிரம் முடிக்க வேண்டுமென அலுவலர்களுக்கு அமைச்சர் அட்வைஸ் கொடுத்தார்.
சோளிங்கரில் ரூ.11 கோடி மதிப்பில் நடந்து வரும் ரோப் கார் பணியினை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்தார்.
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில் 11 கோடி மதிப்பில் நடைப்பெற்று வரும் ரோப்கார் பக்தர்களுக்கான அடிப்படை வசதி கட்டுமான பணிகளை அமைச்சர் ஆர் காந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கட்டிடத்தின் நுழைவாயில் சிற்பங்கள், கட்டிடத்தின் மேற்கூரை அமைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தார்.
பெரியமலையில் அமைய உள்ள மாற்றுத்திறனாளிகள் செல்லும் சாய்வு பாதை அமைப்பது குறித்தும் .சின்னமலை யோக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு திருக்கோவில் புனரமைப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது திருக்கோவில் உதவி ஆணையர் ஜெயா மற்றும் பலர் உடனிருந்தனர்.