திருப்பத்தூரில் மருத்துவ கல்லூரி அமைக்க முதல்வரிடம் கோருவேன்! அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூரில் மருத்துவ கல்லூரி அமைக்க மக்களுடன் சேர்ந்து முதல்வரிடம் கோருவேன் என அமைச்சர் அமைச்சர் எவ.வேலு பேட்டியளித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் கட்டப்பட்டு வரும் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமானப்பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்ட வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் புதிய ஆட்சியர் அலுவலகம் ரூ.109.71 கோடி மதிப்பில் துவங்கப்பட்டு தற்போது பணிகள் நடந்து வருகிறது.
அந்த பணிகளை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
புதிதாக கட்டப்பட்டு வரும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலகங்கள் இடம் பெறும் வகையில் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
200 பேர் அமரும் வகையில் பெரிய கூட்டரங்கம், 300 இருக்கைகள் கொண்ட குறை தீர்வுக்கூட்ட அரங்கம், 3 சிறிய கூட்டரங்கள், கழிவறை, செயற்கை நீருற்றுடன் கூடிய பூங்கா, கட்டிடத்தை சுற்றிலும் சாலை வசதி, நடைபாதை, மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தளம், மழைநீர்வடிகால் அமைப்பு அலங்கார மின்விளக்குகள், குடிநீர் வசதி, முகப்பு அலங்கார வளைவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த புதிய கட்டிடத்தில் கொண்டு வரப்பட உள்ளன.
கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இவை அனைத்தும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு முதல் அமைச்சரை அழைத்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்படும். மேலும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கொண்டு வாழ்பவர்கள் இங்கேயே தங்கி அரசு அலுவல்களை பார்த்து தங்குமிடம் மற்றும் அவர்களுக்காக உணவு கேண்டின் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்திலேயே உள்ளனர். அத்துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் நேரடியாக பேசி உள்ளேன். அதனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறந்தவுடன் அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றன் பின் ஒன்றாக இங்கேயே செயல்பட வழிவகை செய்யப்படும்.
மேலும் திருப்பத்தூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக மருத்துவக் கல்லூரியை வேண்டும் என்று கேட்டு வருகின்றனர் அதனை திருப்பத்தூர் மாவட்ட மக்களிடம் இணைந்து நானும் முதலமைச்சரிடம் கோரிக்கை வைப்பேன் எனவும் கூறினார்.