இதோ வரப்போகுது கொரோனா மாத்திரை! விலை ரூ.1,400/!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
தற்போது நாடெங்கிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் கொரோனா சிகிச்சைக்காக மோல்னுபிராவிர் (மோல்ஃப்ளூ) என்ற மாத்திரையை அறிமுகம் செய்யவுள்ளதாக டாக்டர் ரெட்டி ஆய்வகங்கள் கடந்த வாரம் அறிவித்த நிலையில்,தீவிர கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு மேற்படி மாத்திரைகளை பயன்படுத்தலாம் என கூறப்பட்டது. ஐந்து நாட்களுக்கு உண்டான இந்த மாத்திரையின் விலை 1,400/- ரூபாயாம்.
இதுகுறித்து ரெட்டி ஆய்வகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
மோல்ஃப்ளூ மாத்திரைகள் அடுத்த வாரம் முதல் மருந்து கடைகளில் கிடைக்கும். அதிகம் கொரோனா பாதிப்புகள் உள்ள மாநிலங்களுக்கு இந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாத்திரையின் விலை 35 ரூபாய் ஆகும். 5 நாட்கள் சிகிச்சைக்கு மொத்தம் 40 மாத்திரைகள் தேவைப்படும். 40 மாத்திரைகளின் விலை 1,400 ரூபாய் ஆகும். இரண்டு தடுப்பூசிகளை செலுத்தியவர்கள் இந்த மாத்திரைகளை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.