66 விரிவுரையாளர் தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை!

66 விரிவுரையாளர் தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை!

  ஆ.கவுசர்,

பாலிடெக்னிக் விரிவுரையாளர்  தேர்வில்  முறைகேடு செய்து தேர்ச்சி செய்த  இந்த கல்வித்துறை திருடர்களுக்கு வாழ் நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறைகேடுகளுக்கு பின்புலமாக இருப்பவர்கள் கண்டு கொள்ளப்படவில்லை.

  ஆசிரியர்கள் தேர்வு வாரியம் சார்பாக, விரிவுரையாளர்களின் நேரடி ஆட்சேர்ப்பு (பொறியியல் / அல்லாத) பணியிடங்களுக்கான 16.09.2017 அன்று எழுதப்பட்ட தேர்வு தொடர்பான  முறைகேடு செய்ததற்காக 66 பேரை நிரந்தரமாக தள்ளுபடி செய்யப்பட்டனர்.

  2017-2018 ஆண்டிற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் பணிக்கு, அறிவிப்பு எண் 04/2017, படி நடந்த தேர்வில் முறைகேடு நடந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.