அரசு ஆஸ்பத்திரி மேற்கூரை டமால்!

கு.அசோக்,
சோளிங்கர் அரசு மருத்துவமனை குழந்தை நல பிரிவு கட்டிட மேற்கூரை முழுவதுமாக விழுந்தது சேதமடைந்ததால் - தற்காலிகமாக கட்டிடம் மூடி வைக்கப்பட்டது - சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் ஆய்வு
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அரசு மருத்துவமனையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடத்தில்
அவசரபிரிவு உள் நோயாளி ஆண், பெண் பிரிவு , குழந்தைகள் நல பிரிவு முதலமைச்சர் காப்பீடு பிரிவு இயங்கி வந்த நிலையில், கடந்த மாதம் குழந்தைகள் நல பிரிவில் மேல்புறம் சிமெண்ட் பூச்சு விழுந்து சேதமடைந்தது.
இதனால் அந்த பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தை சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர் சோளிங்கரில் இயங்கும் தேசிய தரச்சான்றிதழ் பெற்ற அரசு மருத்துவமனையாகும் இந்த மருத்துவமனையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடம் உள்ளது.
இந்தகட்டிடம் தற்போது பழுதடைந்துள்ளதால் இந்த கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டவும் சில கட்டிடங்கள் புனரமைப்பு பணிகள் செய்வது குறித்து அரசிடமும் ,மாவட்ட நிர்வாகத்திடமும் தெரிவிப்பதாக சொன்னார்.
மேலும் இந்த மருத்துவமனை மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ளதால் ராணிப்பேட்டை,வேலூர் ,சித்தூர், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டம் மக்கள் உள் நோயாளிகள் வெளி நோயாளிகள் என தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகளை குறித்து கேட்டு அறிந்தார். மருத்துவ சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் விபத்தில் படுகாயம்பட்டு வரும் நபர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும், ஆம்புலன்ஸில் குழந்தை பிறப்புகள் தவிர்க்கும் வகையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
அப்போது காங்கிரஸ் நகர தலைவர் கோபால், தொகுதி பொறுப்பாளர் ராஜா,செங்கல் நத்தம் ஊராட்சி மன்றத்தலைவர் தாமோதரன், வழக்கறிஞர் ரகுராம் ராஜ், தலைமை மருத்துவர் இளங்கோவன் ,மருத்துவர் நவீன் மற்றும் பலர் உடனிருந்தனர்.