ஆடு மேய்க்க லஞ்சம்:- அடாவடி வன அலுவலர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்! முன்னாள் எம்.எல்.ஏ.டெல்லி பாபு பங்கேற்பு!

ஆடு மேய்க்க லஞ்சம்:- அடாவடி வன அலுவலர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்! முன்னாள் எம்.எல்.ஏ.டெல்லி பாபு பங்கேற்பு!

 ஜி.கே.சேகரன்,

 மலைவாழ் மக்களிடம் சில வன அலுவலர்கள் அடாவடியாக செயல்படுகிறார்கள் என்று குறை கூறி ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம் .எல் .ஏ. டெல்லிபாபு அவர்கள் கலந்துக் கொண்டார்.

   திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாகவும் ஜவ்வாது மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாகவும் கண்டன நடைபெற்றது

   சிங்காரப்பேட்டை வன அலுவலர்களை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டம் மலைவாழ் மக்கள் சங்க மாநில குழு உறுப்பினர் லட்சுமணராஜா தலைமையில் ஏற்பாடானது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

   இதில் முக்கிய கோரிக்கைகளாக சிங்காரப்பேட்டை வன உட்கோட்டத்திற்கு உட்பட்ட சுமார் 34 கிராமங்களில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமான ஆடு, மாடு மேய்ப்பதற்கு பணம் வசூலிப்பது, பழங்குடி மக்களை அச்சுறுத்தி அனுபவ நிலங்களை சமப்படுத்துவது, அபராதம் விதிப்பது, பொய் வழக்கு போடுவது, உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    மேலும் சிங்காரப்பேட்டை வன அலுவலரான முருகன் மற்றும் கோவிந்தன் ,(கார்டு) அர்ஜுனன் மலைவாழ் மக்களிடம் மிரட்டி ஆடுமேய்க்க  250 முதல் 500 வரை பணம் கொடுக்க வேண்டும் எனக்கு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.மலைவாழ் மக்களை வாழவிடாமல் செய்யும் வன அலுவலர்கள் மீது துறை நீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

   இந்தக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாச்சாத்தி டெல்லி பாபு அவர்கள் கலந்துக் கொண்டு ஆவேசமாக பேசினார்