அண்ணாமலைக்காக ஆர்பாட்டம்!

அண்ணாமலைக்காக ஆர்பாட்டம்!

அண்ணாமலைக்காக ஆர்பாட்டம்!

  ஜி.கே.சேகரன்,

 அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜகவினர் ஆர்பாட்டம் நடத்தினர்  அப்போது அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

  அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் எம்ஜிஆர் சிலைக்கு முன்பாக பாஜக மாவட்ட செயலாளர் கண்மணி ஆர்பாட்டம் நடத்தினார்.

 தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து உடனடியாக அண்ணாமலையை விடுதலை செய்ய கோரி கோஷங்கள் எழுப்பி அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக பொறுப்பாளர்கள் வினோத் குருசேவ் முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அப்போது நாட்டறம்பள்ளி போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

 இதே போன்று ஆம்பூரிலும் பேருந்து நிலையம் அருகில் பாஜகவினர் அண்ணாமலை கைதை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர், இந்நிலையில் அண்ணாமலையும் விடுவிக்கப்பட்டார், ஆர்பாட்டக்காரர்களும் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.