ஒ.பி.எஸ். டீமிலிருந்து ஆளுங்கட்சிக்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்!

ஒ.பி.எஸ். டீமிலிருந்து ஆளுங்கட்சிக்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்!

 ம.பா.கெஜராஜ்,

 ஓ.பி.எஸ். அணி அ.தி.மு.க.விலிருந்து கழற்றிவிடப்பட்டு  சுமார் ஒரு ஆண்டு காலம் ஆகியிருக்கும் நிலையில்,

 இந்த கோஷ்டிக்கு போர்படை தளபதியாக திகழ்ந்தவர் வைத்திலிங்கம், ஆனால் அவர் தற்போது ரூட் மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க.வில்  பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக மிகப் பெரும்பான்மையான் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் திரண்டிருந்த போது ஓபிஎஸ் துணிச்சலாக சென்றார் என்று பாராட்டுக்கள் வந்தன. அந்த துணிச்சலுக்கு சொந்தக்காரர் வைத்திலிங்கம் தான். மொத்த கூட்டமே எதிர்த்தாலும் வைத்திலிங்கம் இருக்கும் நம்பிக்கையில் தான் ஓபிஎஸ் மேடை ஏறினார்.

   எந்த நேரத்தில் அவையில் இருந்து வெளியேற வேண்டும் என்பதையும் அவரே தீர்மானித்து மைக் பிடித்து முழங்கினார். அப்படியிருந்தவர் திருச்சி மாநாட்டுக்கு பின்னர் திசைமாறும் பறவையாக எகிறிவிட்டார்.

     திருச்சி மாநாட்டு பணிகளிலும் வைத்திலிங்கத்தின் உழைப்பும், பணமும் பெரும்பான்மையாக இருந்துள்ளது. 

திருச்சி மாநாட்டுக்காக கூட்டம் கூட்டியதிலிருந்து செலவு செய்ததிலிருந்து வரை எல்லாம் வைத்திலிங்கம் தான். ஆனால் கடைசி வரை அது குறித்த செலவுகளுக்கு கொஞ்சமும் பொறுப்பேற்காமல் இருந்ததும், நக்கலாக சில வார்த்தைகளை ஓபிஎஸ் குடும்பத் தரப்பு விட்டதும் தான்  வைத்திலிங்கத்தின் கோபத்துக்கு காரணம்” என்கிறார்கள்.

  அதையும் கடந்து சில நெருடல்கள் இருப்பதாக சொல்கிறார்கள். டிடிவி தினகரன் சந்திப்பு விவகாரமும் ஒரு காரணமாம். ஓபிஎஸ்ஸுடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் செல்லாதது குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கான பதிலை வைத்திலிங்கம் மூலம் கொடுங்கள் அவர் தான் சற்று அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது என்று டிடிவி தினகரன் தரப்பு கூறியதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

   அதனாலே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வைத்திலிங்கம் பேச வைக்கப்பட்டு வருகிறார் என்கிறார்கள்.

  எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவரை தொடர்ந்து பேசவைத்தால் அந்த பக்கம் செல்லமாட்டார் என்பது தான் இதன் பின்னால் உள்ள சூச்சுமமாம். ஆனால் அவர் வேறு பக்கம் வண்டியை திருப்ப தயாராகிவிட்டதாக சொல்கிறார்கள். ஆளும் தரப்பிலிருந்து வைத்திலிங்கம் குடும்ப நிறுவனத்துக்கு டெண்டர் ஒன்று ஓகே ஆனதாம். இதன் மூலம் அந்த பக்கத்திலிருந்து சிக்னல் வர அதற்கு வைத்திலிங்கம் தரப்பும் சம்மதம் தெரிவித்துவிட்டதாக சொல்கிறார்கள்.