புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு கோவில்! பூமி பூஜை போடப்பட்டது! புறக்கணித்த மாவட்ட செயலாளர்!

கு.அசோக்,
காட்பாடியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு கோவில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவில் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
வேலூர் மாவட்டம்,காட்பாடி அடுத்த கரசமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ரகுபதி நகர் பகுதியில் ராமச்சந்திரா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் எம்ஜிஆர் பக்தர்கள் இணைந்து முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு கோவில் கட்ட முடிவெடுத்தனர்.
அதனடிப்படையில் இன்று அப்பகுதியில் 80 சென்ட் நிலத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவில் கட்ட இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
அதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முரளி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் திரளான எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஸ்ரீ சக்தி வராஹி குருஜி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சிக்கு முறைப்படி அதிமுக தலைமையிடம் அனுமதி ஏதும் பெறப்படாத காரணத்தால் மாவட்ட நிர்வாகத்தினர் எவரும் இதில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.