சீலை அகற்ற ஓபிஎஸ் - இ.பி.எஸ். முறையீடு!

ஜி.சாந்தகுமார்,
அதிமுகவின் இரண்டு கோஷ்ஷ்டிகள் நேற்று மோதிக்கொண்டதால் சென்னையில் வன்முறை ஏற்பட்டது. அதனால் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க.தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த உத்தரவை ரத்து செய்து, சீலை அகற்றுங்கள்" என்று ஓபிஎஸ் தரப்பில் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்டு வழக்கை விசாரணைக்கு நாளை ஏற்றுக்கொள்வதாக கோர்ட்டு தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து இதே விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பிலும் அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்று முறையீடு செய்யப்பட்டது. அதில், வருவாய்க் கோட்டாட்சியரின் உத்தரவை ரத்துசெய்து சீலை அகற்ற உத்தரவிடக்கோரி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கேட்டுக்கொண்ட நீதிபதி, இதுதொடர்பான மனுதாக்கல் நடைமுறைகள் முடிந்தால், வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். இந்த வழக்கின் நடைமுறைகள் முடிந்தால், நாளை இரு தரப்பினரின் வழக்குகளும் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.