'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ., மீண்டும் சேர்ப்பு! பா.ஜ.க.ஏமாற்றம்!

ம.பா.கெஜராஜ்,
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்றவர்களுக்கு தலைவர் பதவியை திமுக கவுன்சிலர்கள் விட்டுக் கொடுக்ல்கவில்லை.
அந்தவகையில் அறிவாலயம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூட்டணிகட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை கழக கண்மணிகள் தட்டிப்பறித்தால் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என கூறப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இது போன்ற நடந்த அடாவடி செயலை தலைமை கழகத்தின் எச்சரிக்கையின் பேரில் கழகத்தினர் கைவிட்டனர்.
ஆனால் கடலூர் எம் .எல் .ஏ.அய்யப்பன் தலைமை எச்சரிக்கையை மீறினார், குறிப்பாக கடலூர் மாநகராட்சி மேயர் ஆக்க கவுன்சிலர்களை கடத்தி, தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால், அவரது முயற்சி முறியடிக்கப்பட்டது.கட்சிக் கட்டுபாட்டை மீறியதாக அய்யப்பனை, தி.மு.க., அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போதுள்ள சூழலில் அய்யப்பனை பா.ஜ.க.வளைக்கிறது என்கிற செய்திகள் வெளியானது.
குறிப்பாக, தமிழக பா.ஜ.,வில் சேரும்படி, அய்யப்பன் எம்.எல்.ஏ.,வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த தகவல்கள் வெளியானபின்னர் கட்சி தலைமையிடம் வருத்தம் தெரிவித்து, அய்யப்பனிடம் கடிதம் பெற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை, தி.மு.க., நேற்று ரத்து செய்தது.
இதுகுறித அறிவிப்பை திமுக பொதுச் செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார், 'அய்யப்பன் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் கட்சி பணியாற்ற அனுமதிக்குமாறு, தலைவரிடம் கோரிக்கை வைத்தார். 'அதை ஏற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, கட்சி உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார்' என, கூறியுள்ளார்.
ஆக பா.ஜ.க. திட்டம் தற்போதைக்கு பனால்.