மாவட்ட ஆட்சியர் புதிய அலுவலகத்தை அமைச்சர் காந்தி திடீர் ஆய்வு!

ஜி.கே.சேகரன்,
இராணிப்பேட்டை மாவட்டத்தில் புதியதாக உருவாகும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்போது கட்டிட கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்த புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று மாலை நேரில் சென்று பார்வையிட்டு அங்கு நடைபெற்று வரும் கட்டிட பணிகளை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கட்டிடத்தின் உள்ளே சென்ற அமைச்சர் அலுவலக அறைகளின் வரைபடத்தை பார்வையிட்டார். அப்போது
இப்பணிகள் கூடிய விரைவில் முழுமையாக முடிக்கப்படும் என்று அமைச்சரிடம் அதிகாரிகள் கூறினர்.
இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் இராணிப்பேட்டை நகர மன்ற உறுப்பினர் சுஜாதா வினோத் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.