அம்போ என விட மாட்டோம்! சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்!

G.K.Sekaran,
கவுண்டன்ய மகாநதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் அவர்களுக்கு மாற்று இடத்தில் வீடுகளை கட்டி கொடுப்போம் அம்போ என விட மாட்டோம் அமைச்சர் துரைமுருகன் கவுண்டன்ய மகாநதியை ஆய்வு செய்து பேட்டி!
வேலூ£ ¢மாவட்டம், வேலூர் கொணவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாமினை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவங்கி வைத்தார்.
¢ அவருடன் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. மற்றும் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் கொணவட்டம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ சிதரம்பரனாரின் புகைப்பட கண்காட்சி வாகனத்தையும் அமைச்சர் துரைமுருகன் துவங்கி வைத்தார்.
¢ அங்கு மாணவர்கள் ஆர்வமுடன் புகைப்படங்களை பார்வையிட்டனர் பின்னர் பள்ளிக்கு தனி நபர்கள் சார்பில் மேஜைகள் நாற்காலிகள் வழங்கப்பட்டது, நூலகமும் திறக்கப்பட்டது.
இதன் பின்னர் குடியாத்தத்தில் கவுண்டன்ய மகாநதியை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்
பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த நதி கடற்கரை போல் காட்சியளித்தது.
ஆனால் ஆக்கிரமிப்பு செய்து இந்த கவுண்டன்ய ஆற்றை ஓடை ஆக்கிவிட்டார்கள்.
1424 ஆக்கிரமிப்புகள் ஆற்றில் வீடுகள் இருந்தது அதில் 321 அகற்றப்பட்டுவிட்டது. மீதமுள்ளவைகள் அகற்றி ஆக வேண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யபடாத வண்ணம் சாலை அமைத்து ரோடுபோட்டால் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது.
நான் தான் இதற்கு அமைச்சர் இந்த ஆக்கிரமிப்பு அகற்றியவுடன் இருபுறமும் சாலையாக மாற்றியமைப்போம்.
அதற்காக பெரிய தொகையை அரசிடம் கேட்டுள்ளோம் விரைவில் பணிகள் துவங்கும் மீண்டும் குடியாத்தத்தில் இந்த ஆறு நல்ல முறையில் காட்சியளிக்கும் ஆக்கிரமிப்பை அகற்றியவர்களுக்கும் உடனடியாக வீடுகளை குடிசைமாற்று வாரியத்தில் கூறி உடனடியாக கட்டிகொடுப்போம் யாரையும் அம்போ என்றுவிட்டுவிடமாட்டோம் என்று கூறினார்.