"உதயநிதிக்கு பேனர் வைத்து ஜால்ரா போட்ட போலிஸ்காரர்! பாய்ந்தது வழக்கு!

வ.மகேசு
"உதயநிதி ஸ்டாலின் நடிக்கு நேஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்" என்று கதிரவன் என்கிற போலிஸ்காரர் பேனர் வைத்து ஜால்ரா அடித்துள்ளார்.
இந்நிலையில் அந்த போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இது பற்றின விவரம் வருமாறு,
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது.
இதற்கு வாழ்த்துக்கூறி பேனர் வைத்த பெரம்பலூர் ஆயுதப்படை தலைமைக் காவலர் இரா.கதிரவன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தலைமை காவலரான கதிரவன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாடலூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அங்கு அவர் பணிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியான நிலையில், " உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன், இரா. கதிரவன் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை" என உதயநிதி படத்துடனும் தனது படத்துடனும் கதிரவன் பிளக்ஸ் பேனர் வைத்து இருந்தார் .
அப்படியிருக்க, இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானது.
குறிப்பாக அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் அரசியல் அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு பிளக்ஸ் பேனர் வைத்து சட்டத்தை மீறிய செயல் என கடுமையாக விமர்சித்னர்.
இதையடுத்து அந்த பிளக்ஸ் பேனரை அகற்ற பெரம்பலூர் காவல் துறையினர் அதனை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து பெரம்பலூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் இளைய பெருமாள் என்பவர் கதிரவன் மீது புகார் அளித்தார். இதையடுத்து பொது இடத்தில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்து பொது இடத்தின் அழகை கெடுத்தது என்ற பிரிவில் காவலர் கதிரவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் இரண்டு பகுதிகளுக்கு பணியிட மாற்றம் செய்தும் பணியில் சேராமல் இருக்கும் கதிரவன் மருத்துவ விடுப்பில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் உயர் அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.