கரெக்டா கேஸ் போட நடவடிக்கை எடுங்க:- முதல்வருக்கு கோரிக்கை!

ம.முருகன்,
நாங்கள் ஆத்திரப்பட்டு தாக்கினால் அதற்குரிய கேஸை போட்ஸச் சொல்லுங்க, அதை விடுத்து அதிகபட்சமான தண்டனை பெறக்கூடிய அளவுக்கு காவல் துறை பொய் வழக்கு போடுகிறார்கள் என்று முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கு.
அதன் விவரம் வருமாறு,
பெறுநர்,மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள்.தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை-
பொருள்;- சமூக நீதிக் காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டி மனு-
ஐயா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பணிவான வணக்கம், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியம் பொன்னியந்தல் ஊராட்சி தலித் மக்களுக்கு எதிராக ஆதிக்க சமுகத்தினரும் காவல்துறையும் இணைந்து செயல்படுத்தி வரும் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுக்க வேண்டி மனு.
பொன்னியந்தல் ஊராட்சி தலித் மக்கள், மெய்யூர் ஊராட்சி பஸ் நிறுத்தத்தில் தான் பேருந்து ஏற வேண்டும் .மெய்யூர் பகுதியில் உள்ள ஆதிக்க சமூகத்தினர் பேருந்தில் ஏற வரும் பொன்னியந்தால் ஊராட்சி தலித் மக்களை பேருந்தில் ஏற விடாமல் தடுப்பதும் கீழ்த்தரமாக பேசுவதும் தாக்குவதும் வாடிக்கையாக செயல்பட்டு வருகிறது.
இதனை தலித் மக்கள் தட்டி கேட்டாலோ அல்லது கோபமூண்டு தாக்கினாலோ ஆதிக்க சமூகத்தினர் போலீஸ் துணையுடன் பிரச்சனைக்குறிய வழக்குபதியாமல்-பெரும் குற்றம் சம்பந்தப்பட்ட கொலை முயற்சி வழக்கு பதிவு செய்வதோடு ஜாமினில் வெளிவர முடியாத கொலை முயற்சி குற்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் கடந்த 20-1-2023 அன்று பொன்னி யந்தல் ஊராட்சி தலித் மக்கள் மீது பஸ் நிறுத்தத்தில் ஏற்பட்ட பிரச்சனையை சமாதானமாக பேசி தீர்க்க முற்பட்ட பொன்னியந்தல் ஊராட்சி தலித் மக்கள் குமார், சத்தியராஜ், முருகன் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்துள்ளது காவல்துறை.
எனவே காவல்துறை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சமூக நீதி காவலர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்மைச்சர் அவர்கள் தலித் மக்களின் மீது திணிக்கப்படும் பொய் வழக்கை வன்கொடுமையை தடுக்க நடவடிக்கை எடுத்து சமூக நீதி காத்திட வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.இப்படிக்கு,இ.மெய்யழகன்,தமிழ்நாடு டாக்டர்.அம்பேத்கர் மன்றம்.