செருப்பு மட்டும் வைத்திருப்பவர்கள் செருப்பால் தான் எதிர்கொள்வார்கள்:- திமுக தரப்பில் வெளியான செருப்பு டுவிட்!

செருப்பு மட்டும் வைத்திருப்பவர்கள் செருப்பால் தான் எதிர்கொள்வார்கள்:- திமுக தரப்பில் வெளியான செருப்பு டுவிட்!

ம.பா.கெஜராஜ்,

 கருத்து வைத்திருப்பவர்கள் கருத்தால் எதிர்கொள்வார்கள், வெறும் செருப்பு மட்டும் வைத்திருப்பவர்கள் செருப்பால் தான் எதிர்கொள்வார்கள் என ஒரு காரசாரமான டுவிட் திமுக வட்டாரத்திலிருந்து புறப்பட்டிருக்கிறது.

  உண்மையிலேயே இது செருப்பால் அடிக்கிற மாதிரியான டுவிட் என்றால் அது மிகையாகாது.

   மதுரை மாவட்டம், திருமங்கலம் அடுத்த டி.புதுப்பட்டியை சேர்ந்தவர் ராணுவ வீரர் லட்சுமணன். இவர் ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்ததையடுத்து, அவரது உடல் தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

ராணுவ வீரரின் உடலுக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது, முதலில் அரசு சார்பில் அஞ்சலி செலுத்திவிட்ட பிறகுதான் மற்றவர்கள் அஞ்சலி செலுத்த வேண்டும் என அமைச்சர் கூறினாராம். அதற்கு அங்கிருந்த பாஜக.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

   அங்கிருந்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது காரில் புறப்பட்டார். விமான நிலையத்திலிருந்து வெளியே வரும்போது அங்கு கூடி இருந்த பாஜகவினர் அவருக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் அமைச்சரின் கார் மீது செருப்பை வீசினார். உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் காரில் வீசப்பட்ட செருப்பை அப்புறப்படுத்தினர். இதுதொடர்பாக அங்கு நின்றிருந்த சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். தி.மு.க.  

இதுகுறித்து மதுரை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தளபதி எம்எல்ஏ கூறுகையில், நாட்டிற்காக உயிர் நீத்த ராணுவ வீரர் லட்சுமணன் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் வழியில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களின் வாகனத்தை வழிமறித்து தாக்க முற்பட்ட பாஜக குண்டர்களின் அநாகரிகமான செயல் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை திமுகவினர் மதுரையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, மதுரை மாவட்ட பாஜக பொறுப்பாளர் ராஜ்குமார், மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகை தந்தார். அப்போது விமான நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் திரண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் அங்கு வந்த தமிழக அரசின் நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன், மாநில பாஜக தலைவர் மற்றும் மாவட்ட தலைவரையும் தகாத வார்த்தைகளால் பேசியும், மரியாதை குறைவாகவும் கண்ணியக்குறைவாகவும் பேசியதோடு, அதிகாரிகளை பார்த்து “இந்த பரதேசி பயலுகளுக்கு என்ன தகுதி உள்ளது? யார் இவன்களை உள்ளே அனுமதித்தது” எனக் கூறி திட்டினார்.

 இதன் பின்னர் அதிகாரிகள் சமரசம் செய்து அமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜன் மரியாதை செய்து அஞ்சலி செய்து கிளப்பியபின் எங்களது தலைவர்களையும் உள்ள அனுமதித்தனர்.

இந்நிலையில் விமான நிலையத்தை விட்டு வெளியே சென்ற அமைச்சரின் காரினை உள்ளே நடந்த விசயங்களை கேள்விபட்ட வெளியே நின்றுக்கொண்டிருந்த சில தொண்டர் உணர்ச்சிவசப்பட்டு காரினை மறித்து எதிர்ப்பினை காட்டியுள்ளனர். அப்போது காரினை எங்களது தொண்டர்கள் மீது ஏற்றச் சொல்லி டிரைவரிடம் கத்தியதால் அவரது டிரைவரும் காரினை தொண்டர்கள் மீது ஏற்றி கொல்ல முயன்றுள்ளார்.

மேலும் இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு காவல் துறையினர் எங்களது தொண்டர்கள் மீது தடியடி பிரயோகம் செய்து விரட்டினர்.

   எங்களது கட்சிகாரர்கள் காவல்துறையினரால் ஆண்கள், பெண்கள் என்கிற வித்தியாசம் இல்லாமல் கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்துள்ளனர். அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜனின் துண்டுதலின் படியும், அவரின் கட்டளைப்படியும் காவல் துறையினர் மற்றும் திமுக-வின் குண்டர்கள் எங்களது கட்சி காரர்களை கடுமையாக தாக்கி கொலை முயற்சி செய்துள்ளனர்.

எனவே அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் மற்றும் திமுகவை சேர்ந்த தொண்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து குற்ற வழக்கு பதிவு செய்ய உத்திரவிடுமாறு காவல் ஆணையாளர் வேண்டுகின்றேன் என புகார் தெரிவித்துள்ளார்.

 இந்த புகார் மிகைபடுத்தி கொடுக்கப்பட்டிருப்பதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர். கார் மீது தாக்குதல் நடத்தியதாக பாஜக மாவட்ட துணைத்தலைவர் குமார் (48), பிரசார பிரிவு செயலாளர் பாலா (49), கோபிநாத் (42), ஜெய கிருஷ்ணா (39), கோபிநாத் (44), முகமது யாகூப் (42) ஆகிய பாஜகவினர் 6 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

  இதெல்லாம் ஒரு பக்கம் சென்றுகொண்டிருக்க நேற்று இரவோடு இரவாக மதுரை பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், அமைச்சர் பிடிஆர்- ஐ அவரது இல்லத்தில் சந்தித்து மன்னிப்பு கோரியதாக புகைப்பட்டங்கள் வெளியாகியிருக்கின்றன.

 மேலும் டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகியதாகவும், பாஜகவின் மத வெறுப்பு அரசியல் பிடிக்காததால் இங்கு தொடர விரும்பவில்லை என்று காரணம் சொன்னதாகவும் செய்திகள் பரவுகிறது.

 அப்படின்னா அவர் விரைவில் மீண்டும் திமுகவில் இணைவதாக தகவல்.

குறிப்பு:- நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர் உடலுக்கு இறுதி மரியாதை செய்ய அங்கீகரிக்கப்பட்ட நெறிமுறை உள்ளது. மாநில அமைச்சர்கள், மாவட்ட அரசு அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் மரியாதை செலுத்திய பிறகுதான் அரசியல் கட்சி தலைவர்கள் செலுத்த முடியும். இதுதான் அரசு நிகழ்ச்சியின் புரோட்டோகால். இந்த விவரம் கூட தெரியாமல் பா.ஜ.கவினர் அரசியல் ஆதாயத்திற்காக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பலர் கருத்து சொல்கிறார்கள்.