காவல் நிலையம் முன் கலாட்டா செய்த போதை ஆசாமி! கட்டி வைத்து தர்மடி கொடுத்த மக்கள்!!

காவல் நிலையம் முன் கலாட்டா செய்த போதை ஆசாமி! கட்டி வைத்து தர்மடி கொடுத்த மக்கள்!!

 ஜி.அசோக்,

 காவல் நிலையம் முன்பு போதை இளைஞர் ரகளை- மரத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் தர்ம அடி உதை - சமூக வலைதளங்களில் வீடியோ வேகமாக பரவியது.    

  திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கந்திலி காவல் காவல் நிலையம் முன்பு போதையில் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனங்களை வழி மறைத்து ரகளை செய்தார்.

  இதனை அப்பகுதியில் உள்ள சிலர் தங்களது கைபேசியில் படம் எடுத்தனர்,  தொடர்ந்து ரகளை  ஈடுபட்ட அந்த வாலிபரை பிடித்து அப்பகுதி மக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.இதனை சமூக வலைதளங்களிலும் பரவச் செய்துள்ளனர்.

 இதுபோல் போதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபடுவதை காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 காவல் நிலையம் முன்பே இச்சம்பவம் நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 ஆனால் சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலிசார் ஏதுவும் அலட்டிக் கொள்ளவில்லை.

 அது சரி வருமானம் பாதிக்காதா?