ஆகாஷ வாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி:- மறைந்தார்!

ஆகாஷ வாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி:- மறைந்தார்!

ஜி.சாந்தகுமார்,

  80-கிட்ஸ்களுக்கு சரோஜ் நாராயணசாமி அவர்களின் கம்பீர குரல் இப்போதும் மறந்திருக்காது. காலையில் செய்தி நேரத்தில் ரேடியோ பெட்டியை ஆன் செய்தால் ஆகாஷ வாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி என்று கணீர் குரல் கேட்கும்.

  இதனாலேயே மிக அதிக எண்ணிக்கையில் அவருக்கென நேயர்கள் இருந்தனர்.

 இந்நிலையில்  முன்னாள் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி காலமானார். அகில இந்திய வானொலியில் பல ஆண்டுகளாக தமிழ் செய்திப் பிரிவில் பணியாற்றியவர்.தலைநகர் டெல்லியில் தமிழ் பிரிவில் பணியாற்றிய இவர் 1995ல் ஓய்வு பெற்றார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. இவரது கம்பீரமான குரலுக்காகவும், உச்சரிப்புக்காகவும் ஏராளமான நேயர்களைப் பெற்றவர்.

   இந்நிலையில், மும்பையில் வசித்து வந்த சரோஜ் நாராயண சுவாமி, வயது முதுமை காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.