கவுன்சிலர் முதல் ஜனாதிபதி வரை படிப்படியாக  முன்னேறிய திரவுபதி முர்மு!

கவுன்சிலர் முதல் ஜனாதிபதி வரை படிப்படியாக  முன்னேறிய திரவுபதி முர்மு!

ம.பா.கெஜராஜ்,

  கவுன்சிலர் முதல் ஜனாதிபதி வேட்பாளர்வரை முன்னேறியுள்ள திரவுபதி முர்முவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 இவர் சாதாரண கவுன்சிலராக அரசியலுக்கு வந்தவர் ஆவார் இந்நிலையில் இன்றைக்கு ஜனாதிபதி ரேஞ்சுக்கு அவர் முன்னேறியிருக்கிறார்.

 திரவுபதி முர்மு 1958 ஜூன் 20 ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் பைதாபோசி கிராமத்தில் பிறந்தார். 'சான்டல்' பழங்குடியினத்தை சேர்ந்த அவர்.பி.ஏ., முடித்துள்ளார். தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகவும், பின் நீர்ப்பாசன துறையில் இளநிலை உதவியாளராகவும் பணியாற்றினார்.

 

1997 : பா.ஜ. வில் சேர்ந்தார். ரைராங்பூர் நகரின் கவுன்சிலரானார். மாநில எஸ்.டி., பிரிவின் துணை தலைவரானார்.

2000 மார்ச் 6 - 2002 ஆக. 6 : ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராகவும், 2002 - 2004 மே 16 வரை மீன்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

 2006 - 2009 : மாநில பா.ஜ., பழங்குடியின பிரிவின் தலைவராக இருந்தார்.2009: இரண்டாவது முறை எம்.எல்.ஏ., ஆனார்.

 2010 - 2015 : மயூர்பாஞ்ச் மாவட்ட பா.ஜ., தலைவராக இருந்தார்.     

 2013 - 2015 : பா.ஜ., எஸ்.டி., பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்தார்.

 2015 மே 18 - 2021 ஜூலை 12 : ஜார்க்கண்டின் முதல் பெண் கவர்னராக பணியாற்றினார்.

 2022 ஜூன் 21: பா.ஜ., கூட்டணி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

  இவர் வெற்றிபெறுவது உறுதி என்பதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.