சீட்டிங் தம்பதி மீது நடவடிக்கை பாயுமா?

சீட்டிங் தம்பதி மீது நடவடிக்கை பாயுமா?

  ஜான்.மரியஜோசப்,

  இப்போதெல்லாம் சீட்டிங் சாம்பியன்களுக்குத்தான் பவர் அதிகமாக உள்ளது. ஆம் எந்த ஆட்சி வந்தாலும் இது போன்ற சீட்டிங் பார்ட்டிகள் அவர்கள் கைவரிசையை காட்டத் தவறுவதில்லை.

   இந்நிலையில் அரசு வேலை வாங்கிதருவதாக  லட்சக்கணக்கில் மோசடி செய்த கோவை தம்பதி மீது நடவடிக்கை கோரி மக்கள் கத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 கோவை மாவட்டம் கணபதி, வ உ சி நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பலரிடமும் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். ஆனால் மாதங்கள் கடந்தும் அவர்கள் பணம் கொடுத்த யாருக்கும் அரசு வேலை வாங்கித் தந்ததாக தெரியவில்லை. 

  அவர்கள் தங்களை ஏமாற்றுவதை தாமதமாக அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் மோசடியில் ஈடுபட்ட தம்பதியின் வீட்டின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவல்துறையினர் மோசடி செய்து அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

  போராட்டத்திற்குப் பிறகு பட்டதாரிகளின் பட்டம் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் நேற்று இரவு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இதுவரை காவல் துறையினரால் மோசடியில் இத்தனைக்கும் இது தொடர்பாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்திருந்தனராம், ஆனால் நடவடிக்கைதான் இல்லையாம்.

தெரிந்த விஷயம் தானே!