வடிகால் குழாயில் கொட்டிய ரூ.13 லட்சம்! அரசு அலுவலர் சிக்கினார் !

  ம.பா.கெஜராஜ்,

 கர்நாடக அரசு அதிகாரி வீட்டில் வடிகால் குழாயில் ரூ.13 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.ஸ்

  கர்நாடகாவில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) அலுவலர்கள், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த அரசு அதிகாரிகளுக்கு எதிராகப் பெரும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 அதில் கலாபுர்கியில் உள்ள உதவிப் பொறியாளர் சாந்தனா கவுடாவின் வீட்டில் வடிகால் குழாயில் இருந்து பணம் கைப்பற்றப்பட்டன.

 அவரது வீட்டில் வடிகால் குழாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 லட்சம் ரூபாய் ரொக்கத்தை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

  அவரது வீட்டிலிருந்து மட்டும் மொத்தம்ன் ரூ.54 லட்சம் ரொக்கம் சிக்கியதாக ஏசிபி அலுவலர் ஒருவர் தெரிவித்தார். குழாயிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளை மஞ்சள் வாளியில் சேகரித்தனர்.

 கர்நாடகாவில் 60 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஏசிபி ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், ஏராளமான பணம் மற்றும் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

 லஞ்ச ஒழிப்பு அமைப்பின் 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 வேளாண்மைத் துறை இணை இயக்குநரின் வீட்டில் இருந்து சுமார் 7 கிலோ தங்கம் மற்றும் ரூ.15 லட்சம் மதிப்பிலான ரொக்கம் மீட்கப்பட்டது. வேளாண் துறை இணை இயக்குனர் ருத்ரேசப்பா வீட்டில் இருந்து, ஏழு கிலோ தங்கம் மற்றும் ரூ.15 லட்சம் ரொக்கம் ஏசிபியால் பறிமுதல் செய்யப்பட்டது.

   பெங்களூரு, மங்களூரு, மாண்டியா மற்றும் பல்லாரியில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த 15 அலுவலர்களின் அலுவலகங்களில் 400 ஏசிபி அதிகாரிகள் சோதனை நடத்தினர். 1

  அதில், 15 அலுவலர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்குகள் தொடர்பாக 8 போலீஸ் சூப்பிரண்டுகள், 100 அதிகாரிகள் மற்றும் 300 ஊழியர்கள் கொண்ட குழு இன்று 60 இடங்களில் சோதனை நடத்தியதாக ஏசிபி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   மங்களூர் ஸ்மார்ட் சிட்டி நிர்வாக பொறியாளர் கே.எஸ்.லிங்ககவுடா, மாண்டியா நிர்வாக பொறியாளர் ஸ்ரீனிவாஸ் கே, தொட்டபல்லாபுரா வருவாய் ஆய்வாளர் லட்சுமிநரசிமையா, பெங்களூரு நிர்மிதி கேந்திரா முன்னாள் திட்ட மேலாளர் வாசுதேவ், பெங்களூரு நந்தினி பால்பண்ணை பொது மேலாளர் பி.கிருஷ்ணா ரெட்டி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. வேளாண்மைத் துறை இணை இயக்குநர் டி.எஸ்.ருத்ரேசப்பா, பைலஹொங்கலா கூட்டுறவு வளர்ச்சி அலுவலர் ஏ.கே.மஸ்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.