போதை பொருள் வழக்கு:- ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஏன் இரத்த பரிசோதனை செய்யவில்லை!
ம.பா.கெஜராஜ்
சொகுசுக்கப்பலில் போதை பார்ட்டி நடந்ததாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு கடந்த 24 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அவருக்கு ஜாமின் கிடைப்பதில் பல்வேறு தடைகள் இருந்து வருகிறது.
இந்நிலையில் வழக்கறிஞர்கள் சிலர் இது பற்றின குளறுபடிகளை வெளியிடுகிறார்கள்.
ஆர்யன் கானின் ஜாமீன் மனு பம்பாய் உயர்நீதிமன்றத்தில் உள்ளது, ஆனால் அவரிடம் குற்ற செயலுக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், அவரிடமிருந்து போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் அவர் தரப்பு வாதிட்டு வரும் நிலையில் அவர் தொடர்ந்து சிறையில் இருப்பதற்கான காரணங்களையும் வழக்கறிஞரின் கருத்துகள் பற்றியும் இங்கே பார்ப்போம்.
மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கும் மற்ற இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்ததையடுத்து, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜாமீனை நிராகரித்து மும்பை நீதிமன்றம் அளித்த 19 பக்க உத்தரவு சில விஷயங்களை தெளிவாக குறிப்பிட்டுள்ளது. NCB 13 கிராம் கோகோயின், ஐந்து கிராம் Mephedrone (MD), 21 கிராம் சரஸ் மற்றும் 22 MDMA (ecstasy) மாத்திரைகளை கைப்பற்றியது- ஆனால் இவை எதுவும் ஆர்யன் கானிடம் இல்லை.
6 கிராம் சரஸ் - ஆர்யன் கானின் நண்பர் அர்பாஸ் வசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது சட்டத்தின்படி ஒரு சிறிய அளவு என கூறப்பட்டுள்ளது.
ஆர்யன் கானிடம் கடத்தல் பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், அவர் இன்னும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நம்பர் 1 ஆக இருக்கிறார், மேலும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
ஜாமீனை நிராகரிப்பதற்கான மூன்று காரணங்களை நீதிமன்றம் மேற்கோள் காட்டியது- NCB இந்த வழக்கில் விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது, வாட்ஸ்அப் செய்திகள் ஆர்யன் கான் ஒரு 'சர்வதேச போதைப்பொருள் கும்பலின் தொடர்புடையவர்களில் ஒரு பகுதியாக இருப்பதைக் காட்டுகின்றன மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள் பதியப்பட்டிருக்கின்றமன. இதைத்தான் நீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது.
6 கிராம் சரஸ் கைப்பற்றப்பட்ட அர்பாஸுடன் ஆர்யன் மிகவும் நெருங்கிய நண்பர்தான் ஆனாலும் அர்பாஸிடம் போதைப்பொருள் இருந்தது ஆர்யனுக்குத் தெரியாது என்றும் நீதிமன்றம் கூறியது.
மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் தனது உத்தரவில், “வாட்ஸ்அப் உரையால்களை ஆய்வு செய்ததில், விண்ணப்பதாரர்/குற்றம் சாட்டப்பட்ட எண்.1 (ஆர்யன்) அறிமுகம் இல்லாத நபர்களுடன் போதைப்பொருள் பற்றி பேசியிருப்பது தெரியவந்துள்ளது. உரையாடல்களில் மொத்த அளவு மற்றும் ஸ்டாராங்கான மருந்துகள் பற்றின குறிப்பும் உள்ளது. தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களைக் கையாளும் நபர்களுடன் விண்ணப்பதாரர்/குற்றம் சாட்டப்பட்ட எண் 1 தொடர்பில் உள்ளது தெளிவாகிறது.
நீதிமன்றம் மேலும் கூறியது, “குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி எண்.1 (ஆர்யன்) தொடர்ந்து போதைப் பொருள்களின் சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வாட்ஸ்அப் தகவல்கள் முதன்மையாக வெளிப்படுத்துகின்றன. எனவே குற்றம் புரியவில்லை என்று கூற முடியாது. 1 (ஆர்யன்) ஜாமீனில் இருக்கும்போது இதேபோன்ற குற்றத்தைச் செய்ய வாய்ப்பில்லை” என்று கூறி அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தார்.
வாட்ஸ்அப் தகவல்கள் இந்திய ஆதாரங்கள் சட்டம், 1872 இன் கீழ் நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும். சட்டத்தின் பிரிவு 65ஙி மின்னணு சாதனத்தை தவறாமல் பயன்படுத்த வேண்டும், சாதனம் சரியாக வேலை செய்ய வேண்டும் மற்றும் அதில் உள்ள தகவல்களை பாதிக்கக்கூடாது என்று கூறுகிறது. தயாரிக்கப்பட்ட சான்றுகள் அசல் சாதனத்தில் உள்ள பதிவின் நகலாக இருக்க வேண்டும்.
இந்நிலையில் ழிசிஙி இன் வழக்கு குறிப்புகள் ஊடகங்களில் 'கசிவு' செய்ததன் மூலம், ஆர்யன் கானுக்கும் நடிகை அனன்யா பாண்டேக்கும் கஞ்சா குறித்த "சாட்" ஸ்கிரீன் ஷாட்கள் சுற்றி வருகின்றன. இப்போது இந்த சாட்டும் 2019 இல் ஆர்யன் கான் வெளிநாட்டில் படிக்கும் போது நடந்தது என்று கூறப்படுகிறது.
நீதிமன்றத்தின் முன் என்ன பொருள் சமர்ப்பிக்கப்படுகிறது என்பதை மட்டுமே நீதிமன்றம் பரிசீலிக்கும். இந்த கட்டத்தில் அது ஆதாரமாக கருதப்படுகிறதா என்று சொல்ல இயலாது. ஏனென்றால் இப்போது குற்றம் சாட்டபட்டவர்கள் சார்பில் ஜாமீன் மட்டுமே கேட்கப்படுகிறது என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் உட்கொண்டது குறித்து ஆர்யன் மற்றும் அர்பாஸிடம் இருந்து வாக்கு மூல அறிக்கைகள் இருப்பதாகவும் NCB நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அர்பாஸ் 'தானாகவே முன்வந்து' தனது ஷூவில் இருந்து சாக்ஸ்களை அகற்றி ஏஜென்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக என்சிபி கூறியுள்ளது.
என்டிபிஎஸ் சட்டத்தின் 67வது பிரிவின் கீழ் வாக்குமூல அறிக்கைகள் உறுதியானதாக இருக்க முடியாது என்றும், என்சிபி அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளாகவே கருதப்படுவார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இருப்பினும், இது ஜாமீன் கால கட்டம் தான், விசாரணையின் போது வாதங்களை வைத்துக் கொள்ளலாம் என்று வழக்கறிஞர் எடுத்துரைத்துள்ளார்.
எனவே அறிக்கைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது ஏற்றுக்கொள்ள முடியாததையோ நீதிமன்றம் கருத்தில் கொள்ள வாய்ப்பில்லை. அது அவர்களின் முன் வைக்கப்படும் பொருளைப் பார்த்து, அவர்களுக்கு முன் உள்ள பொருளின் அடிப்படையில் முடிவெடுக்கும்.
எவ்வாறாயினும், பிரிவு 67 என்பது சட்டத்தின் கீழ் அறிக்கைகளை எடுக்க அனுமதிக்கும் ஒரே பிரிவு அல்ல என்றும் அவர் கூறினார்.
இன்னும் முக்கியமான பிரச்சினை என்னவென்றால், ழிசிஙி இந்த தன்னார்வ அறிக்கைகளை இரத்தப் பரிசோதனை மூலம் நிரூபிக்கவில்லை, னாலும் போதைப்பொருள் உட்கொண்ட வழக்கில் அர்பாஸ் மற்றும் ஆரியனை சிக்கவைக்க போதுமான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் கூறுவது வேடிக்கையாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு என்சிபி ஏன் இரத்த பரிசோதனை செய்யவில்லை என்றும் சட்ட நிபுணர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.