ஜோஸ் அலுக்காஸே காலி! கண்காணிப்பு கேமராக்களில் ஸ்பிரே அடித்து கொள்ளை!

ஜி.கே.சேகரன்,
ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடையில் கழிவுநீர் கால்வாயின் வழியாக உள்ளே புகுந்து வைர நகைகள் தங்கநகைகள் கொள்ளை வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் தலைமையில் விசாரணை கண்காணிப்பு கேமராக்கள் அனைத்திலும் ஸ்பிரே அடித்து புதிய முறையில் கொள்ளையடித்து சென்ற கும்பல்.... வடநாட்டு கொள்ளையர்கள் கைவரிசையா என விசாரணை.
வேலூர் மாவட்டம், வேலூர் நகரில் காட்பாடி சாலையில் ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடை உள்ளது. இக்கடையில் காலை கடையை திறந்த போது ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு வாடிக்கையாளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த நகைகளை யாரோ கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
மேற்படி மர்ம நபர்கள் கடையின் பின்புறமாக உள்ள கழிவுநீர் கால்வாயை துளையிட்டு நகைகடையினுள் சென்று வரைநகைகள் தங்கள் நகைகளை கொள்ளையடித்துகொண்டு மீண்டும் அதே வழியில் தப்பி சென்றுள்ளனர்.
இதில் நகைகடையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கேமராக்களிலும் ஸ்பிரே அடித்ததால் அவை செயல்பட உருவங்கள் சரியாக தெரியாத அளவு அதனை மாற்றிவிட்டு பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது பற்றி தகவலறிந்த வேலூர் சரக காவல்துறை துணைதலைவர் திரு.ஏ.ஜி.பாபு,இ.கா.ப மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணா, இ.கா.ப. ஆகியோர் சம்பந்தபட்ட பகுதிக்கு நேரடியாக விரைந்து வந்து விசாரணை செய்தனர்.
மோப்ப நாயும் கடையினுள்ளே சென்று மீண்டும் கழிவுநீர் கால்வாய் பள்ளம் தோண்டப்பட்ட இடம் அருகில் நின்றது.
இக்கடையில் பணியாற்றும் ஊழியர்களிடமும் கைரேகைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.
நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் இரண்டாவது மாடியில் தங்கியுள்ளனர்.
மக்கள் நடமாட்டமுள்ள பிரதான சாலை அத்துடன் இரவு காவலர்கள் 4 பேர் இருந்தும் இரவு கொள்ளை நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வேலூர் பகுதிகளில் வடநாட்டு கொள்ளை கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் எனவும் தெரியவருகிறது.