கொடுமுடி தாசில்தாரின் லஞ்ச கெடுபிடி! கலெக்டரா? முதல்வரா? தெனாவட்டு!!!

கொடுமுடி தாசில்தாரின் லஞ்ச கெடுபிடி! கலெக்டரா? முதல்வரா? தெனாவட்டு!!!

 தி.விநோத்குமார்,

  ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டத்தைச் சேர்ந்த விவசாயிடம் ஒரு லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வட்டாட்சியர் மீது ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த புகாரின் விவரம் வருமாறு,

அனுப்புநர்

ரா.முருகேசன் த/பெ மா.ராமசாமி,

நடுக்காட்டுத்தோட்டம், வடக்குமூர்த்திபாளையம்,

கொடுமுடி அஞ்சல் - 638 151 ஈரோடு மாவட்டம்.

 பெறுநர்

உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு

அய்யா,

பொருள் : பட்டாவில் தவறுதலாக சேர்க்கப்பட்ட பெயர்களை நீக்கம் செய்து தரக்கோரிய விண்ணப்பத்திற்கு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்பு 1 கூறியதால் வட்டாட்சியர் அலுவலக தரவசதியில்லை என்று பணியாளர்களின் முன்னால் தரக்குறைவாக பேசி வெளியே அனுப்பிய கொடுமுடி வட்டாட்சியர் திரு.மாசிலாமணி அவர்கள் மீது உரிய விசாரணை செய்து குற்றவியல் நடவடிக்கை மேற்க்கொள்ள கோருதல் தொடர்பாக.

 மேற்கண்ட விலாசத்தில் வசிக்கும் எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொடுமுடி "ஆ" கிராமம் பட்டா எண் 1783-ல் உள்ள புல எண் 614/6-ல் விவசாய விளைநிலங்கள் உள்ளது. மேற்படி பட்டா எண் 1783-ல் உள்ள நிலங்கள் எங்கள் குடும்பத்திற்க்கு மட்டுமே பாத்தியப்பட்ட பூர்விக சொத்தாக உள்ள நிலையில், எங்கள் குடும்பத்திற்கும் சொத்திற்கும் எந்த உரிமையும் இல்லாத சிலரது பெயர்கள் வருவாய் பதிவேடுகள் கணிணிமயமாக்களின் போது கொடுமுடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா எண் 1783-ல் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

  தற்சமயம் பட்டா எண் 1783-ல் தவறுதலாக சேர்க்கப்பட்டவர்களின் பெயர்களை நீக்கம் செய்து தரக்கோரி 04.08.2022-ல் கிராம நிர்வாக அலுவலரின் ஆலோசனைப் படி தேவையான இணைப்பு ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன்.

  இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், நில அளவையர், தலைமையிடத்து துணைவட்டாட்சியர் வரை ஒவ்வொருவரையும் சந்தித்து 04.08.2022 தேதியிட்ட எனது விண்ணப்பம் தொடர்பாக கோப்பின் நிலையறிய சென்று வந்தேன்.

   அவ்விதமாக 08.11.2022 சுமார் 12.15 மதியம் கொடுமுடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் சென்று வட்டாட்சியர் திரு. மாசிலாமணி அவர்களிடம் எனது 04.08.2022 தேதியிட்ட பட்டாவில் சம்பந்தமில்லாதவர்களின் பெயர் நீக்கம் கோரும் விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டேன்.

 அச்சமயம் கொடுமுடி வருவாய் வட்டாட்சியர் அவர்கள் உங்களது கொடுமுடி "ஆ" கிராம பட்டா எண் 1783-ல் உள்ள மற்றவர்கள் பெயர்களை நீக்கம் செய்ய 1 லட்சம் லஞ்சம் கொடுத்தால் 1 வாரத்தில் வேலையை முடித்து தருகிறேன் என்று கூறினார்.

 அய்யா நான் ஏழை விவசாயி ஏற்கனவே கடனில் உள்ளேன். ஆகவே இனியும் கடன் வாங்கியும் கூட தங்களுக்கு தர முடியாத நிலையில் உள்ளேன் என்று கூறினேன்.

  உடனே ஆவேசமான வட்டாட்சியர் "என்னய்யா நீ. உன் கதை காளை மாட்டில் பால் கறக்கும் கதையா இருக்கு நாங்கள் ஒன்றும் தர்மத்திற்கு சேவை செய்ய வரவில்லை பணமில்லாமல் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறை மேலதிகாரிகள் என்ன, முதல்வரே சென்னாலும் கூட உன்னுடைய விண்ணப்பத்தை பரிசீலிக்க மாட்டேன்.

  உன் பெயரைச் சொல்லி யாராவது சிபாரிசு சொன்னால் உன்னைத் தொலைத்துக் கட்டி விடுவேன்" என்று கூறி பணம் கொடுக்க வசதியற்ற உனக்கு எதுக்கு இந்த வேலை ஏன் உன் அப்பனும் பாட்டனும் வச்சிருந்த மாறியே நீயும் நிலத்தை வச்சிருந்துவிட்டு போக வேண்டியது தானே என்று அசிங்கமான நாகூசும் கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.

  வட்டாட்சியர் அலுவலக ஆண், பெண் ஊழியர்கள் முன்னாலேயே என்னை மரியாதை குறைவாக பேசி வெளியே போய்விடு என்று விரட்டியடித்தார். நான் வட்டாட்சியர் அவர்களின் ஆவேசமாக இந்த வார்த்தைகளால் நான் கூனிக்குறுகி மிகவும் மன உலைச்சலுக்கு ஆளானேன்.

 மேற்படி வட்டாட்சியரின் செயல்கள் சட்ட விரோதமான அடிப்படை மனித உரிமையை மீறிய செயலாகும். ஆகவே எனது புகாரின் மீது நேர்மையான முறையில் உரிய விசாரணை செய்து கொடுமுடி வருவாய் வட்டாட்சியர் திரு. மாசிலாமணி அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை, குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்வதுடன், உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

  இது விசாரணையில் இருக்குதாம், பங்கு போகுதல்லவா எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?