டாஸ்மாக்கில் சாதனை! போதை மாத்திரை சரக்கு குவாட்டர் 500/-ரூபாய்!!

ம.தமிழ்,
நிலக்கோட்டை தாலூகா இராமராஜபுரத்தில் ஒரு குவாட்டர் விலை 500 ரூபாய் விற்கப்படுவதாக கிராம மக்கள் முதல்வருக்கு புகார் அளித்துள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலூகாவில், இராமராஜபற ஊராட்சிக்கு உட்பட்ட டாஸ்மாக் கடையில் காலை 10 மணி முதல் இரவு எட்டு மணி வரை ஒரு குவாட்டர்விலை 200 ரூபாய்க்கு விற்க்கப்படுதாம்.
அதே இரவு 10 மணிக்கு மேல் காலை 8 மணி வரை ஒரு குவாட்டர் 500 ரூபாயாம்.
இந்த கடையில் மட்டும் 24 மணி நேரம் சரக்கு விற்கப்படுதாம்.
மேலும் அரசு டாஸ்மாக் சரக்கை பெயரளவில் டிஸ்பிலேயில் வைத்து விட்டு விற்பனை செய்வது எல்லாம் உள்ளூர் உருட்டல் சரக்காம்.
அது என்ன உருட்டல் சரக்கு என்று தானே கேட்கிறீர்கள், அதாங்க அது போலி சரக்குங்க.
"வேல்யம் டென்" மாத்திரை, டீ கசாயம் போன்றவற்றை கலந்து விற்கிறார்களாம்.
மேற்படி அரசு சரக்கு கடை 24 மணி நேரமும் செயல்படுவதால் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் பகுதிகளைச் சுற்றி உள்ள குடிமகன்கள் அங்கு படை எடுத்து வருகிறார்களாம்.
இதற்கெல்லாம் தற்போது உள்ள ஊராட்சி தலைவரின் கணவரும், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரும் தான் பக்கபலமாக உள்ளதாக சொல்கிறார்கள்.